திடீரென நடிக்கத் தயங்கும் கீர்த்தி

அறிமுக இயக்குநர் ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையை மையமாக வைத்து உருவாகும் படம் என்கிறார்கள்.

பெரும்பாலான காட்சிகள் திகிலூட்டும் வகையில் இருக்குமாம். அதுமட்டுமல்ல, இப்படத்தில் கதாநாயகனும் இல்லை.

'மகாநதி' படம் வெற்றி பெற்றதையடுத்து இனி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளாராம் கீர்த்தி. இதனால் பெரிய நாயகர்களின் படங்களில் கூட நடிக்கத் தயங்குகிறார்.

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து திடீரென அழைப்பு வந்திருக்கிறது. ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டதுடன் தாமே அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அவர் கூறியதைக் கேட்ட பிறகுதான் எவ்வித தயக்க மும் இன்றி உடனடியாக கால்‌ஷீட் ஒதுக்குவதாக கூறினாராம் கீர்த்தி. இந்தப் படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!