புதுப் படம் ஒன்றில் திரௌபதி வேடத் தில் நடித்துள்ளார் சினேகா. அப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
கன்னட இயக்குநர் நாகண்ணா இயக்கத்தில் உருவாகிறது ‘குருஷேத் திரா’. ஒரேசமயத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது.
இதில் நடிகர் அர்ஜுன் கர்ணனாக நடித்துள்ளார். சினேகா திரௌபதி கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். மகாபார தத்தை அடிப்படையாகக்கொண்டு பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். பட முன்னோட்டக் காட்சி வெளியாகி உள்ளது.
“காலஞ்சென்ற நடிகர் அம்பரீஷ் இப்படத்தில் பீஷ்மராகவும் நடிகர் சோனு அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். மேலும் ரம்யா நம்பீசன், ஹரிபிரியா, மேக்னா ராஜ் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
“திரௌபதி கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்தேன் என்று இயக்குநர் பாராட்டியது மகிழ்ச்சி தந்தது,” என்கிறார் சினேகா.