தனது பிறந்தநாளை எளிமையாக, அதே சமயம் உற்சாகமாகக் கொண்டாடி உள்ளார் நடிகர் கார்த்தி.
தற்போது ‘கைதி’யிலும் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் தலைப்பிடப்படாத ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி.
தனது பிறந்தநாளையொட்டி சில நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கார்த்தி. தனது 31வது வயதிலேயே சமூகப் பணியாற்ற மக்கள் நல மன்றத்தைத் தொடங்கி உதவிகளைச் செய்து வருகிறார்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் மன்ற உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளனர்.
கார்த்திக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகை நயன்தாரா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.