தெலுங்குத் திரையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அதனால் அவர் தன்னுடைய சம்பளத்தை திடீரென்று உயர்த்தி இருக்கிறார்.
2012ல் தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான இவருக்கு நிறைய எதிர்மறை விமர்சனங்களே பரிசாகக் கிடைத்தன. அதன்பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தப் படமும் இவருக்கு அமையவில்லை.
இந்நிலையில், அதிர்ஷ்டவசமாக தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ‘மகரிஷி’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு பூஜாவை தேடி வந்தது.
படமும் எதிர்பார்த்த வெற்றியை அடைய, தற்போது பூஜாவை நோக்கி தயாரிப்பாளர்கள் படையெடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்தப் படத்திற்கு முன்பே ‘ஜிகர்தண்டா’ படத்தின் தெலுங்கு மறுபதிப்பில் லட்சுமிமேனன் கதாபாத்திரத்தில் நடிக்க பூஜாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார் இயக்குநர் ஹரிஷ் ஷங்கர். ஆனால் தற்போது ‘மகரிஷி’யின் வெற்றி யால் தனது சம்பளத்தை 2 கோடி ரூபாய்க்கு உயர்த்திவிட்டார் பூஜா ஹெக்டே.