நீண்ட இடைவெளிக்குப் பின், தமிழில் டாப்சி நடித்த ‘கேம் ஓவர்’ திரைப்படம் அண்மையில் வெளியானது.
இப்படம் மிகப்பெரிய வெற் றியைப் பெற்றிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறார் நடிகை டாப்சி.
படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காகச் செய்தியாளர் கள் சந்திப்பை நடத்தினர் ‘கேம் ஓவர்’ படக்குழுவினர். அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்தார் நடிகை டாப்சி.
“தமிழ்ப் படங்களில் நடிப்ப தற்கு எனக்கு ரொம்பவே ஆசை உண்டு. ஆனால், தொடர்ச்சியாக எனக்குப் பட வாய்ப்புகள் வர வில்லை. அது ஏன் என்று தெரிய வில்லை.
“நடிகர், நடிகையர் ஒரு படத் தின் அச்சாணி போன்றவர்கள். அவர்கள் இயக்குநர் கையில் இருக்கும் கருவிகள். ஒவ்வொரு படத்தையும் எப்படி உருவாக்க வேண்டும் என்பது இயக்குநர்கள் கையில்தான் உள்ளது.
“அதனால் இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதைக் கேட்டு நடிகர், நடிகையர் அப்படியே நடித் துக்கொடுத்துவிட வேண்டும்.
“நீங்கள் ஏன் 100 கோடி ரூபாய்க்கு வசூலைக் குவிக்கும் படங்களில் நடிக்கவில்லை எனக் கேட்கின்றனர்.
“எனது படங்கள் 50 கோடி ரூபாய் வசூலை அடைந்தாலே போதும். என்னைப் பொறுத்த வரையில், எனது ரசிகர்கள்தான் என்னுடைய முதலாளிகள். அவர்கள்தான், ஒவ்வொரு முறை யும் 300 ரூபாய் செலவு செய்து எனக்காக திரையரங்கத்திற்கு வந்து, மூன்று மணி நேரத்தைச் செலவு செய்கின்றனர். அவர்களுக்காகத் தான் நான் படங்களில் நடிக்கவேண் டும்.
“எனக்கு எப்போது திருமணம் என எல்லோரும் கேட்கின்றனர். திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமானது; உன்னதமானது.
“அந்த உறவுக்குள் போக வேண்டும் என்பது என்னுடைய எண்ணமும்கூட. ஆனால், அதற் கான காலகட்டம் இப்போது இல்லை என நினைக்கிறேன்.
“இப்போது எனது முழுக் கவ னமும் சினிமாவில்தான் உள்ளது. “குழந்தைகள் மீது எனக்கு எப்போ துமே ஒரு தனி ஈடுபாடும் நாட்ட மும் உண்டு. குழந்தைகள் ஒவ்வொருவருக்
கும் தேவை.
“குழந்தை தேவை என்ற எண் ணம் எனக்குள் தீவிரமாகும் போது, நான் சட்டெனத் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து விடு வேன்.
“மேலும் எனக்கு பேட் மிண்டன் விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வயதில் அந்த விளையாட்டைக் கற்றுக் கொண்டு, என்னால் விளையாட முடியாது.
“அதனால், ஒரு பேட்மிண்டன் குழுவை அப்படியே வாங்கி அதை நிர்வகிப்பது என முடிவெடுத்துத் தான் அக்சஸ் குழுவை வாங்கி உள்ளேன்.
“தகுதியும் திறமையும் உள்ள வர்களை ஊக்குவித்து, விளை யாட்டையும் இந்திய வீரர்களையும் பெருமைப்படுத்த வேண்டும் என் பதும் தனது விருப்பம்,” என்கிறார்.