தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தலுக்குப் பாதுகாப்புக் கேட்டு சென்னை போலிஸ் ஆணையரிடம் நடிகர் விஷால் மனு கொடுத்தார்.
நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23ஆம் தேதியன்று, அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல் லூரியில் நடைபெறவுள்ளது.
தேர்தலை அமைதியான முறை யில் நடத்த பாதுகாப்புக் கேட்டு சென்னை போலிஸ் ஆணையாளர் விசுவநாதனைச் சந்தித்து, பாண் டவர் அணியைச் சேர்ந்த நடிகர் விஷால் மனு அளித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த விஷால், “நடிகர் சங்கத் தேர்தலில் சுமார் 2 ஆயிரம் பேர் வரை வாக்களிக்க உள்ளனர்.
“நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.
“அடையாரில் நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதால், எந்த வகை யிலும் அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசலோ, பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்படாது,” என்று கூறினார்.