சிவகார்த்திகேயன் தன் சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்த ‘கனா’ திரைப்படம் தெலுங்கிலும் உருவாகி உள்ளது.
இந்நிலையில் அப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிட்டார் நடிகர் சிரஞ்சீவி. அது மட்டுமல்ல, படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டி உள்ளார். கடந்த சில நாட்களாக பார்ப்பவர்களிடம் எல்லாம் இதைச் சொல்லிச் சொல்லி பூரித்துப் போகிறாராம் ஐஸ்வர்யா.
“சிரஞ்சீவி சார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார் என எதிர்பார்க்கவே இல்லை. எனது கதாபாத்திரமும் நடிப்பும் மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார்.
“அவ்வளவு பெரிய நட்சத்திர நடிகர், ஏதோ ஒரு சாதாரண நபரைப் போல் என்னிடம் இயல்பாகவும் சிரித்தபடியும், பந்தா இல்லாமல் பேசியதை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. அவர் என்னுடன் பேசியதை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.