நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ என்ற படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், “என்னைச் சில இயக்குநர்கள் நிராகரித்துள்ளார்கள். எனது ஒல்லியான தோற்றத்தையும் நிறத்தையும் வைத்துதான் என்னை நிராகரித்தார்கள்.
இருப்பினும் என் திறமை மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் ஹரிஷ்ராமுக்கு நன்றி,” என்று சொல்லும்போதே கண்கலங்கிய கீர்த்தி பாண்டியன், சிறிது நேரம் பேச முடியாமல் தடுமாறிப்போய் நின்றார். அதன்பிறகு படக்குழுவினர் அவரைத் தேற்றி மீண்டும் பேச வைத்தபோது, “என் மீது நம்பிக்கை வைத்த அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று உணர்வுபூர்வமாகப் பேசினார் கீர்த்தி பாண்டியன்.