விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் இருந்து தான் விலகவில்லை என்றும் தன்னிடம் எதுவும் கூறாமலேயே தன்னைப் படத்தில் இருந்து விலக்கியுள்ளனர் என்றும் நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
"ஆடை' படத்தின் கவர்ச்சியான முன்னோட்டக் காட்சியைப் பார்த்தே இந்த முடிவை எடுத்துள்ளனர். இது ஆணாதிக்க, அகந்தையான மனநிலையைக் காட்டுகிறது.
"நான் படத்தில் இருப்பது பிடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் எனக்கு தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பினார்," என்று அமலா பால் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், விஜய் சேதுபதி மீது தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தற்போதும் நான் அவரது ரசிகை என்றும் அமலா பால் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்கத்தில் உருவாகும் விஜய் சேதுபதியின் 33வது படத்தில் அவரது ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி இருந்தார்.
இப்போது இப்படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்துள்ள அமலா பால், அதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் இருந்து தான் விலகவில்லை என்றும் தன்னிடம் எதுவும் கூறாமலேயே தன்னைப் படத்தில் இருந்து விலக்கியுள்ளனர் என்றும் நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
"ஆடை' படத்தின் கவர்ச்சியான முன்னோட்டக் காட்சியைப் பார்த்தே இந்த முடிவை எடுத்துள்ளனர். இது ஆணாதிக்க, அகந்தையான மனநிலையைக் காட்டுகிறது.
"நான் படத்தில் இருப்பது பிடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் எனக்கு தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பினார்," என்று அமலா பால் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், விஜய் சேதுபதி மீது தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தற்போதும் நான் அவரது ரசிகை என்றும் அமலா பால் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்கத்தில் உருவாகும் விஜய் சேதுபதியின் 33வது படத்தில் அவரது ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி இருந்தார்.
இப்போது இப்படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்துள்ள அமலா பால், அதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
"மும்பையில் எனது தனிப்பட்ட செலவில் நான் 'ஷாப்பிங்' செய்துகொண்டிருந்தேன். திடீரென நான் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் எனக்கு குறுஞ்செய்தி தகவல் அனுப்பினார்.
"ஆடை' படத்தின் முன்னோட்ட காட்சிகளைப் பார்த்தபிறகுதான் தன்னைப் படத்திலிருந்து நீக்கியிருப்பார்கள் என சந்தேகிக்கிறேன்.
"நான் தயாரிப்பு நிறுவனத்துடன் நட்புரீதியாக இருக்கவில்லை என்று கூறி என்னை இப்படத்திலிருந்து நீக்கிவிட்டு எனக்கு பதில் மேகா ஆகாஷை கதாநாயகியாக நடிக்கவைக்க முடிவு எடுத்துள்ளனர்.
"நான் ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி பட நிறுவனமே என்னை நீக்கியுள்ளது.
"ஒத்துழைப்பு கொடுக்காத குற்றச்சாட்டை இதுவரை என்னுடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள் என்று ஒருவருமே என்னிடம் சொன்னது இல்லை.
"எனது எல்லா படங்களின் பட நிறுவனங்களுக்கும் நான் ஆதரவாகவே இருந்துள்ளேன்.
"பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்துக்கு எனது சம்பளத்தில் ஒரு பகுதியை வாங்கிக்கொள்ளவே இல்லை. தயாரிப்பாளர் பணப் பிரச்சினையில் இருந்ததால் அவருக்கு கடன் கொடுத்து இருக்கிறேன்.
"அதோ அந்த பறவை போல' படப்பிடிப்பில் பணத்தை விரயம் செய்யக்கூடாது என்று கருதி சிறிய அறையில்தான் தங்கியிருந்தேன்.
"ஆடை' படத்தில் லாபத்தில் பங்கு தந்தால் போதும் என்று குறைந்த முன்பணம் மட்டும் வாங்கிக்கொண்டு நடித்தேன்.
"தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடிக்க நீங்கள் விதிக்கும் நிபந்தனையை ஏற்கமுடியாது. எனவே நீங்கள் தேவை இல்லை," என்று தயாரிப்பாளர் ரத்னவேலு எனக்கு தகவல் அனுப்பி உள்ளார்.
ஒருவரை ஒப்பந்தம் செய்துவிட்டு, பின்னர் அவரை வேண்டாம் என்று கூறி கழற்றி விட்டு அவரது எதிர்கால வாழ்க்கையை இருட்டடிப்பு செய்யும் வகையில் பாழாக்க நினைப்பது கொஞ்சமும் நியாமில்லாதது என்று அமலா பால் வேதனை தெரிவித்துள்ளார்.

