இருட்டைக் கண்டால் மிரளும் நாயகனின் கதையைச் சொல்ல வருகிறது 'வி-1'

இருட்டைக் கண்டால் மிரளும் நாயகனின் கதையைச் சொல்ல வருகிறது 'வி-1'

1 mins read
dd89ae5a-7578-4b55-b23f-dab002854461
-

இருட்டு என்றாலே பயந்து ஓடும் கதாநாயகன் காவல்துறையில் பணிக்குச் சேர்கிறார். இந்நிலையில் 'வி-1' (V-1) என்ற கதவிலக்கம் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அதுகுறித்து விசாரிக்கிறார் நாயகன். இருளைக் கண்டு பயந்தோடும் அவரால் இக்கொலை தொடர்பாக துப்புத் துலக்க முடிந்ததா, கொலைகாரன் சிக்கினானா? என்பதுதான் 'வி-1' படத்தின் கதை. திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் பாவெல் நவகீதன். இவர் 'வடசென்னை', 'பேரன்பு', 'மெட்ராஸ்' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். குறும்படங்களும் இயக்கி உள்ளார். இப்படத்தில் ராம் அருண் நாயகனாகவும் விஷ்ணுபிரியா நாயகியாகவும் நடித்துள்ளனர்.