13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிப்பு

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் விஜயசாந்தி.

தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா மூலம் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அறிமுகமானவர் விஜயசாந்தி. அதன் பிறகு தமிழிலும் தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

அவர் தனி நாயகியாக, குறிப்பாக காவல்துறை அதிகாரியாக நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

அதிலும் வைஜெயந்தி ஐபிஎஸ் படம் வசூலில் முன்னணி நடிகர்களின் படங்களையும் முந்தியது.

இந்நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டார் விஜயசாந்தி. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்கும் ஆசை வந்திருக்கிறதாம்.

மகேஷ் பாபு படத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

மகேஷ் பாபு கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான ‘கொடுக்கு டிட்டின்னா கபூரம்’ படத்தில் விஜய சாந்தியின் மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!