நீண்ட காலமாக தன் வாழ்க்கையில் போராட்டத்தை மட்டுமே எதிர்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு. நேற்று முன்தினம் தனது பிறந்தநாளையொட்டி டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில் இந்தப் பிறந்தநாள் தனது பாதையை மாற்றி தம்மை ஒரு நேர்மறையான திசைக்கு அழைத்துச்செல்லும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“மின்னுவதெல்லாம் பொன்னல்ல. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே கொடுமையான நேரத்தைத்தான் கடக்கிறேன். “நீண்ட காலமாகப் போராட்டம் மட்டுமே நான் வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒரே விஷயம். என்னைத் தொடர்ந்து ஆசீர்வதியுங்கள். பதிலுக்கு என்னால் கொடுக்க முடிவது எல்லாம் என் அன்பும் நன்றியும் மட்டுமே,” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் சாந்தனு.
தற்போது ‘மதயானைக் கூட்டம்’ விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சாந்தனு. அந்தப் படம் நிச்சயமாகத் தனக்கு திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.