‘இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ‘திகில்’ படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இவர், அவள்’ படத்தின் இயக்குநர். இந்தப் படத்தை ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் புதிய நிறுவனத்தைத் தொடங்கி விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இது, விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படமாகும்.
படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என பெயரிடப் பட்டுள்ளது. இதே பெயரில் 1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஒரு படம் வெளியானது.
இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்திற்கு நெற்றிக்கண் பெயரைப் பயன்படுத்த அனுமதி கொடுத்து வாழ்த்து தெரிவித்த கவிதாலயா நிறுவனத்துக்கும் ரஜினிகாந்துக்கும் விக்னேஷ் சிவன் நன்றி கூறியுள்ளார்.
இதற்கிடையே சூட்டோடு சூடாக படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத் தொகுப்பைக் கவனிக்கின்றனர். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் நெற்றிக்கண் உருவாகி வருகிறது.