விஜய்யின் ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்க பிரபல சின்னத்திரை நிகழ்ச்சிப் படைப்பாளர் விஜே ரம்யா சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘சர்கார்’ படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் பிகில்.
இந்தப் படத்தில் விஜய்யுடன் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ கூட்டணி அமைத்துள்ளார்.
இவர்களது கூட்டடணியில் ஏற்கனவே ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் பிகில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தீபாவளி வெளியீடாக பிகில் திரையிடப்படவிருக்கிறது.
இதில் நயன்தாரா, யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 19ஆம் தேதி சென்னையில் ‘பிகில்’ இசை வெளியீட்டு விழா நடக்கிறது.
இந்த விழாவில் விஜய்யும் பங்கேற்கிறார். ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவை ரம்யா சுப்ரமணியன் தொகுத்து வழங்க இருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் வெளியான விஜய் நடித்த தெறி, மெர்சல் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களையும் ரம்யாதான் தொகுத்து வழங்கியிருந்தார்.
‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் விஜய் 64 படத்தின் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் படத்தின் கதை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதால் படத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர்கள் வெவ்வேறு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
இயக்குநர், முக்கிய நடிகர்கள், தலைமைத் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தவிர வேறு யாருக்கும் படத்தின் முழுக் கதையும் தெரியாது என்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசை அமைக்கும் விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கு கிறது. கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக விஜய் இதுவரை இல்லாத ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
செங்கல்பட்டில் இதன் படப் பிடிப்பை நடத்துவதற்காக ஒரு பிரம்மாண்ட காட்சி அரங்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.