ஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை  

‘சந்தோஷ் சுப்ரமணியம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. அவரது அப்பாவித்தனமான நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. திடீரென்று இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணந்து இல்லறத்தில் இணைந்து இரு குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகிவிட்டார்.

“குழந்தை குட்டியாகிவிட்டது. இனிமேல் நடிக்க வரமாட்டார்,” என்று கருதப்பட்ட நிலையில் மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்து தனது ரசிகர்களை மனம் குளிரச் செய்துள்ளார் ஜெனிலியா.

இதுபற்றி ஜெனிலியா கூறுகையில், “வாழ்க்கையில் வித்தியாசமான பல்வேறு தருணங்களை நான் கடந்து வந்திருக்கிறேன். நடிப்புதான் உலகம் என்ற நிலையிலிருந்து மாறி குடும்பத் தலைவியாக, பரபரப்பான தாயாக பல அனுபவங்களைப் பெற்றுவிட் டேன். தற்போது மீண்டும் நடிக்க வருவதுபற்றி திட்டமிட்டு வருகிறேன். அதற்கான கதைத் தேர்வு நடந்து வருகிறது.

“வாழ்க்கையில் தாய் என்ற அந்தஸ்தை அடைந்தது மிக அருமையான தருணம். எனது குழந்தைகள், கணவருடன் எனது வாழ்க்கையை சரியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வருடத்துக்கு வருடம் வயது ஏறிக்கொண்டே போவது பற்றி எல்லாம் கவலையில்லையா என்கிறார்கள். வயதென்ன வயது? வயது என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல, அதுவொரு சலுகை. அவ்வளவுதான்,” என்கிறார் ஜெனிலியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!