‘‘இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு திருப்பமும் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்,’’ என்கிறார் இயக்குநர் சுதர்.
‘கயல்’ சந்திரன், பார்த்திபன் நடிக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் அறிமுக இயக்குநர் இவர். குறும்பட இயக்குநர் வரிசையில் இருந்து கோலிவுட்டிற்கு வந்திருப்பவர்.
‘‘என் படத்தைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. இந்தக் கதை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது. 2016ல் படப்பிடிப்புக்குச் சென்று 37 நாட்களில் மொத்த படத்தையும் முடித்துவிட்டோம்.
‘‘சில காரணங்களால் பட வெளியீடு தள்ளிப்போனது. ஆனாலும், எப்போது வெளியீடு கண்டாலும் மக்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, மொத்த படக்குழுவுக்கும் இருக்கிறது.
“எனது முதல் படமே தாமதமாகிவிட்டது குறித்து கவலைப் படவில்லையா என்று பலரும் கேட்கிறார்கள்.
“ஒருவேளை நான் இரண்டாவது படம் இயக்கப் போயிருந்தாலும்கூட என்னை முதல் பட இயக்குநர் மாதிரிதான் நடத்தி இருப்பார்கள்.
‘‘ஒரு வேளை உடனுக்குடன் படம் வெளியாகி இருந்தாலும் கூட மோசமாக ஏதேனும் செய்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றியிருக்கும். ஆனால், தாம தமாக வெளியானாலும் படம் கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கிறது.
‘‘பலமுறை படம் பார்த்த எனக்கே அது போரடிக்கவில்லை. அதனால் ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்,’’ என்கிறார் இயக்குநர் சுதர்.