மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து விலகிக்கொண்டுள்ளதாகக் கூறியுள்ள சத்யராஜ், தான் ஏன் விலகினார் என்பதற்கான காரணத்தை இன்னும் கூறவில்லை. ஆனால், ‘‘பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு ஆறு மாதங்கள் கால்ஷீட் வேண்டும். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது,” என இயக்குநர் தரப்பில் இருந்து நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகத்தான் சத்யராஜ் விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பழுவேட்டரையர்’ என்ற முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருந்தார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து திடீரென்று விலகியுள்ளார்.
படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் உள்ள அடர்ந்த காடுகளில் தொடங்க இருக்கிறது.
மணிரத்னம் கேட்டுக்கொண்டபடி, படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கதாநாயகர்கள் அனைவரும் தலைமுடியை நீளமாக வளர்த்து வருகிறார்கள்.