திரைக்குப் பின்னால் உழைப்பவர்களுக்கும் உரிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்க வேண்டும் என விரும்புவதாகச் சொல்கிறார் நடிகை சாய் பல்லவி.
திரைக்குப் பின்னால் கடுமையாக உழைப்பவர்களால் தான் நடிகர், நடிகைகளுக்குப் பெயரும் பெருமையும் வந்து சேர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
“எனக்குக் கிடைக்கும் நற்பெயருக்குப் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பதை நான் என்றும் மறக்க மாட்டேன். அவர்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்,
“ஒரு திரைப்படம் உருவாவதன் பின்னணியில் நூற்றுக்கணக்கானோரின் கஷ்டமும் உழைப்பும் இருக்கிறது. எனவே தான் எனது நடிப்பு சிறப்பாக இருப்பதாக மற்றவர்கள் பாராட்டும் போது அதற்கு நான் மட்டுமே காரணம் என்பதாக நினைத்து, மொத்த பலனையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்,” என்கிறார் சாய் பல்லவி.