‘அசுரன்’ படத்தில் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மஞ்சு வாரியர், “நான் தமிழில் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. குடும்பக் கதை என்பதால் மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. வயது, அனுபவம் தாண்டி தனுஷுடன் நடித்தது நல்ல அனுபவம். கதை கேட்டதை விட படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.
இன்றைய தலைமுறை கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் இந்தப் படத்தில் உள்ளது. ‘அசுரன்’ படத்தின் ஒரு பகுதியாக நான் இருந்ததில் பெருமைகொள்கிறேன். மலையாளம், தமிழ் இரண்டு சினிமாக்களிலும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. கேரள மக்கள் தமிழ் சினிமாவை அதிகம் ரசிக்கிறார்கள். நல்ல கதையாக இருந்தால் தொடர்ந்து தமிழில் நடிக்க விரும்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.