13 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் குட்டி ராதிகா.
‘இயற்கை’ மூலம் தமிழில் அறிமுகமான இவர் திருமணத்துக்குப் பின்னர் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் நவரசம் இயக்கும் ‘தமயந்தி’ படத்தில் அகோரியாக நடிக்கிறாராம். இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் தயாராகிறது.
“’அருந்ததி’, ’பாகமதி’ போன்று இதுவும் திகில் படமாக உருவாகிறது. ராதிகாவுக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது,” என்கிறார் இயக்குநர் நவரசம். மீண்டும் நடிக்க வந்த வேகத்தில 3 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் குட்டி ராதிகா.
“திரையுலகையும் என்னையும் நிச்சயம் பிரிக்கமுடியாது. ஏதேனும் ஒரு வகையில் சினிமாவில் பணியாற்றிக்கொண்டே இருப்பேன். ‘தமயந்தி’ என் நடிப்புப் பசிக்கு நிச்சயம் தீனி போடும் என்கிறார் குட்டி ராதிகா.