தெலுங்கு மொழியில் நிவேதா பெத்துராஜ் நடித்த படங்கள் வெற்றி பெற்றதையடுத்து, தெலுங்குத் திரையுலகில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றதாம்.
நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தைத் தொடர்ந்து ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, ‘சங்கத்தமிழன்’ படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தெலுங்கில் ‘சித்ரலகரி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. அடுத்து வந்த ‘புரோசேவரெவருரா’ படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
இதையடுத்து டோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகைகள் பட்டியில் இணைந்திருக்கும் நிவேதா பெத்துராஜ் அங்கு முன்னணி கதாநாயகியாக மாறி வருகிறார்.
அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘அல வைகுந்தபுரமலோ’, ராம் நடிக்கும் ‘ரெட்’ என இரண்டு பெரிய நாயகர்களின் படங்களில் தற்போது ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் நிவேதா.
‘மகாநதி’ படத்தில் நடித்து தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் இந்திப் படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதால் டோலிவுட்டில் போட்டி குறைந்திருக்கிறது.
மேலும், காஜல் அகர்வால், நயன்தாரா, தமன்னா உள்ளிட்டோரும் தெலுங்குப் படங்களில் நடிப்பது குறைந்துள்ள நிலையில், நடிப்பால் அந்த வாய்ப்புகளைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார் நிவேதா.
அதோடு, இதுவரை கவர்ச்சி நடிப்பிற்கு சில கட்டுபாடுகள் விதித்து வந்த நிவேதா பெத்துராஜ், புதிய இனி கவர்ச்சிகரமாக நடிப்பதற்கும் ஒப்புதல் வழங்கியிருக்கிறாராம்.
தனது முடிவை தமிழ். தெலுங்கு சினிமா உலகிற்குத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் ஒரு கவர்ச்சி ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளாராம் நிவேதா.
முன்னணி நடிகைகள் போட்டிக்கு இல்லையென்றாலும் ராஷ்மிகா, ராசி கண்ணா, சாய் பல்லவி போன்ற இளம் நடிகைகளோடு நிவேதா போட்டி போட்டு நடிக்கவேண்டியிருக்கும் என்பதால் இந்த முடிவுக்கு வந்திருப்பார் என்கிறது தெலுங்கு திரையுலகம்.