‘எலி ஓட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை’

பிற நடிகைகளின் வளர்ச்சியைக் கண்டு தாம் பொறாமைப்படுவதில்லை என்கிறார் லாவண்யா திரிபாதி.

தமிழில் ‘பிரம்மன்’ படத்தில் நடித்த, அவர் தற்போது ‘மாயவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தாம் நடிக்க மறுத்த படங்கள் எப்படியோ வெற்றி பெற்று விடுவதாக அவர் கூறியுள்ளார்.

“சில படங்களில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் அவற்றைத் தவிர்த்தேன். எனினும் அவை வெற்றி பெற்றதால் நான் வருத்தமடையவில்லை.

“எனக்கு ஒத்துவரக்கூடிய படங்களில் மட்டுமே நடிக்கிறேன். தெலுங்கில் வெற்றி பெற்ற ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நான்தான் முதலில் ஒப்பந்தமானேன். ஆனால் கதை பிடித்திருந்தும் நடிக்க முடியவில்லை. அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

“மற்ற நடிகைகள் முன்னுக்கு வந்துவிட்டனரே, நம்மால் எதையும் சாதிக்க முடியவில்லையே என்றெல்லாம் நான் ஏங்குவதில்லை. எலி ஓட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்குக் கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும்,” என்கிறார் லாவண்யா திரிபாதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!