துணிந்து செய்

ரத்தன் மவுலி நாயகனாக நடிக்கும் படம் ‘துணிந்து செய்’. நயனா, நேகா என படத்தில் இரு நாயகிகள். ஆனந்த் இயக்கத்தில் உருவாகிறது இப்படம்.

இளையர்களுக்கு நல்ல கருத்தைச் சொல்லி இருக்கிறார்களாம்.

“வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் உரிய நேரத்தில் உரிய முடிவை எடுக்க வேண்டியது அவசியம்.

“அப்படி முடிவெடுத்தால் அதிலிருந்து மாறக்கூடாது என்பதும் முக்கியம். இந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளோம்.

“அதேசமயம் தவறாக முடிவெடுத்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதையும் விவரித்துள்ளோம்,” என்கிறார் ஆனந்த்.

வாழ்க்கையில் வீண் சந்தேகம் என்பது வரக்கூடாது என்று குறிப்பிடுபவர், அவ்வாறு எழுந்தால் வாழ்நாள் முழுவதும் அதனுடனேயே பயணிக்க வேண்டி இருக்கும் என்கிறார்.

“யார் மீதேனும் சந்தேகம் எழுந்தால் அதை உடனடியாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது நோயாக உருமாறி மொத்த வாழ்க்கையையும் பாழாக்கி விடும்,” என்கிறார் ஆனந்த்.

இது 4 கோணங்களில் பயணமாகும் கதையாம். நாயகன், அவனது குடும்பம், இரு நாயகிகளின் குடும்பங்கள் குறித்து 4 கோணங்களில் விவரிக்கும் வித்தியாசமான திரைக்கதையை அமைத்துள்ளனராம்.

நாயகன் ரத்தன் மவுலி ஏற்கெனவே சில படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர்.

மற்றபடி இதில் பணியாற்றியுள்ள பெரும்பாலானவர்கள் புதுமுகங்களாம். ஆனால் எல்லோருமே திறமைசாலிகள் என்று பாராட்டுகிறார் இயக்குநர்.

“படத்தின் தயாரிப்பாளர் சிவராஜ், நாயகனின் நண்பராக நடித்துள்ளார். ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது காலில் பலமாக அடிபட்டு ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

“அப்படி இருந்தும் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மருத்துவமனையில் இருந்தபடியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்,” என்று நெகிழ்கிறார் ஆனந்த்.

குறைந்த செலவில் உருவான படம் என்றாலும் சண்டைக் காட்சிகளுக்காக திட்டமிட்டதைவிட அதிகம் செலவு செய்தாராம் அந்த நல்ல தயாரிப்பாளர்.

இப்படத்துக்கு மெல்வின் சார்லஸ் இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே ‘பழைய வண்ணாரப்பேட்டை’க்கு இசையமைத்தவர்.

“தயாரிப்பாளர் சிவராஜ் என்னுடைய நீண்ட நாள் நண்பர். முன் அனுபவம் உள்ளவர் என்பதால் அவரால் திட்டமிட்டு இப்படத்தைத் தயாரிக்க முடிந்தது.

“கதை பிடித்திருந்ததால் 30 நாட்களில் படமாக்கிவிடலாம் என்று சொன்னார். அவர் எண்ணத்துக்கேற்ப படக்குழுவின் ஒத்துழைப்போடு 28 நாட்களில் படத்தை உருவாக்கி உள்ளோம்,” என்கிறார் ஆனந்த்.

இவர் ஏற்கெனவே ஐந்து படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.

‘ஒரு மழை நான்கு சாரல்’, படம் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து ‘தேள்’, ‘மெளன மழை’, ‘குரு சுக்ரன்’, ‘பாரதபுரம்’ என்று அடுத்தடுத்து படங்களை இயக்கினார்.

தற்போது புதுமுகங்களை ஊக்குவிக்கும் வகையில் ‘துணிந்து செய்’ படத்தை இயக்கி இருப்பதாகச் சொல்கிறார் ஆனந்த்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!