நித்யா மேனன்: எல்லாத்துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளது

திரைப்படத் துறையில் மட்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல என்றும், எல்லாத் துறைகளிலுமே பாதுகாப்பின்மை நிலவுவதாகவும் சொல்கிறார் நடிகை நித்யா மேனன்.

தமது தனிப்பட்ட வாழ்க்கையில் தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு இதுவரை ஏற்பட்டதில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயற்சி செய்தனர். ஆனால் நான் விட்டுக்கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று அவர்களிடம் கடுமையாக கூறினேன்.

“என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தலையிடுவார்கள்,” என்கிறார் நித்யா மேனன்.

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒரு பெண் தாம் எடுத்துள்ள முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

“தைரியமாக இருந்தாலே பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். இதை மறந்துவிடக் கூடாது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை நான் மறக்கவில்லை,’’ என நித்யா மேனன் மேலும் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!