விஜய் தொலைக்காட்சியில் நடித்து அதன்மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ படம் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். அதன் பின்னர் கார்த்திக்குடன் ‘கடைக்குட்டி சிங்கம்’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து இப்போது ‘மாபியா’, ‘குருதி ஆட்டம்’, ‘கசடதபற’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய செல்ல அய்யாவு அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நாயகியாக, விளையாட்டு வீராங்கனையாக பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
தமிழில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தாண்டு இவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது ‘ஜெகஜால கில்லாடி’, ‘எஃப்.ஐ.ஆர்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து விளையாட்டு சம்பந்தப்பட்ட குடும்ப திரைப்படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ‘ஸ்டூடியோஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார்.