காதல் என்பது சொல்ல முடியாத வலியைப் போன்றது என்கிறார் இளம் நாயகி நிவேதா பெத்துராஜ்.
தற்போதுள்ள கதாநாயகிகளில் மிகவும் வெளிப்படையாக, ஜாலியாக பேசக்கூடியவர் என்று நிவேதாவைச் சிலர் மெச்சிக் கொள்கிறார்கள். இன்னொரு தரப்போ அவர் ரொம்பக் கோபக்காரர் என்கிறது.
இந்நிலையில் அண்மையில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் கலந்துரையாடினார் நிவேதா. அப்போது பலவிதமான கேள்விகள் எழுப்பப்பட்டன. காதல் குறித்தும், காதலிக்கிறீர்களா? என்றும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சாமர்த்தியமாக பதிலளித்தார். காதல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “சொல்ல முடியாத வலியைப் போன்றது,” என்று நிவேதா பதிலளிக்க, மிகச் சுருக்கமான, கச்சிதமான பதில் என்று பலரும் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.