'நடிப்புக்காக தீவிரமாகப் படித்தேன்'

2 mins read
8ad8d847-992b-4496-9099-db5b70c1dd1a
'ஜிப்ஸி' நாயகி நடாஷா சிங் பொறி­யி­யல் துறை­யில் பட்­டம் பெற்­ற­வர். சிறு வயது முதலே சினி­மா­வில் நடிக்க வேண்­டும் என்று ஆசை­யாம். படம்: ஊடகம் -

'ஜிப்ஸி' நாயகி நடாஷா சிங் பொறி­யி­யல் துறை­யில் பட்­டம் பெற்­ற­வர். சிறு வயது முதலே சினி­மா­வில் நடிக்க வேண்­டும் என்று ஆசை­யாம்.

வளர்ந்து ஆளான பிற­கும் ஆசை பெரி­தா­னதே தவிர, குடும்­பத்­தா­ரின் அனு­மதி மட்­டும் கிடைக்­க­வில்லை. நீண்ட போராட்­டத்­துக்­குப் பிறகு பட்­டப்­ப­டிப்பை வெற்­றி­க­ர­மாக முடித்­தால் நடிக்­க­லாம் என்று வீட்­டார் அனு­மதி கொடுத்­துள்­ள­னர்.

"இந்த ஒரு கார­ணத்­துக்­கா­கவே கஷ்­டப்­பட்டு படித்து பட்­டம் பெற்­றேன். வீட்­டி­லும் சினி­மா­வில் நடிக்க மகிழ்ச்­சி­யாக ஒப்­புக்கொண்­ட­னர். ஆனால் எங்கே சென்று வாய்ப்பு கேட்க வேண்­டும், யாரைத் தொடர்­பு­கொள்ள வேண்­டும் என்­ப­தெல்­லாம் எனக்­குத் தெரி­யாது.

"சினிமா வாய்ப்­புக்­காக காத்­தி­ருந்த போது தான் விளம்­ப­ரப் படங்­களில் நடிக்­கும் வாய்ப்­பு­கள் தேடி வந்­தன.

"மாட­லிங் துறை­யில் எனக்கு பாராட்­டு­கள் கிடைத்தபோதி­லும், எனது துறை என்­பது சினிமா தான் என்­ப­தில் தெளி­வாக இருந்­தேன்," என்று சொல்­லும் நடாஷா, கடந்த 2015ஆம் ஆண்டு 'மிஸ் இமாச்­சல பிர­தே­சம்' போட்­டி­யில் அழ­கிப் பட்­டம் பெற்­ற­வர்.

இதை­ய­டுத்து வேறு சில அழ­கிப் போட்­டி­க­ளி­லும் பட்­டங்­களை வென்­றுள்­ளார்.

இந்­நி­லை­யில் தனது மேலா­ளர் மூலம் 'ஜிப்ஸி' படத்­துக்கு நடி­கர், நடி­கை­கள் தேர்வு நடப்­ப­தாகக் கேள்­விப்­பட்­டா­ராம். ராஜு முரு­கன் படம் என்­ற­தும் ஆர்­வம் ஏற்­ப­டவே, மும்­பை­யில் நடந்த அந்­தத் தேர்­வில் பங்­கேற்­றுள்­ளார்.

"ராஜு முரு­க­னின் 'குக்கூ', 'ஜோக்­கர்' ஆகிய இரண்டு படங்­க­ளை­யும் பார்த்­தி­ருக்­கி­றேன். அத­னால் அவர் எப்­ப­டிப்­பட்ட கதை­க­ளைக் கையாள்­வார், அவற்றை இயக்­கு­வார் என்­பதை ஓர­ளவு யூகித்­தி­ருந்­தேன்.

"மும்­பை­யி­லும் சென்­னை­யி­லும் நடிப்பு, ஒப்­ப­னைத் தேர்வு முடி­வ­டைந்த பின் என்னை ஒப்­பந்­தம் செய்­த­னர். எனது முதல் படமே தர­மான படைப்­பாக அமைந்­த­தில் மகிழ்ச்சி," என்­கி­றார் நடாஷா.

ஜீவா­வுக்கு ஜோடி­யாக நடித்­த­தில் மகிழ்ச்சி என்று குறிப்­பி­டு­ப­வர், தமிழ் வச­னங்­கள் பேச சிர­மப்­பட்டபோது ஜீவா தான் தனக்கு உதவி செய்­த­தா­கச் சொல்­கி­றார்.

"நான் ஜீவா நடித்த 'நண்­பன்', 'கோ' படங்­க­ளைப் பார்த்­தி­ருக்­கி­றேன். நான் வடஇந்­தியப் பெண். ஆனால் படத்­தில் தென்­னிந்­தி­யா­வைச் சேர்ந்த இஸ்­லா­மியப் பெண்­ணாக நடித்­துள்­ளேன்.

"அத­னால் எனது உடல் மொழி, பேசும் விதம் என எல்­லா­வற்­றி­லும் கச்­சி­த­மாக வேண்­டும் என்­ப­தற்­காக கொஞ்­சம் மெனக்­கெட வேண்­டி­யி­ருந்­தது. எனது முதல் படம் என்­ப­தால் நன்­றாக நடிக்க வேண்­டும் என மன­துக்­குள் சொல்­லிக் கொண்டே இருந்­தேன்.

"படத்­துக்கு நல்ல விமர்­ச­னம் கிடைத்­தி­ருப்­பது உற்­சா­கம் அளிக்­கிறது. குறிப்­பாக கமல் சார் என் நடிப்பை பாராட்­டிய அந்­தத் தரு­ணத்தை வாழ்­நாள் முழு­வ­தும் மறக்க இய­லாது. அவ­ரது பாராட்­டை­யும், அவ­ரது வார்த்­தை­க­ளை­யும் பொக்­கி­ஷ­மாக கரு­து­கி­றேன்.

"எனக்குப் பிடித்த நடி­கர் கமல். 'விஸ்­வ­ரூ­பம்' படத்தை எத்­தனை முறை பார்த்­தேன் என்­பது எனக்கே தெரி­யாது. அந்­த­ளவு அவ­ரது தீவிர ரசிகை.

"என் வீட்­டில் யாரும் இன்­னும் 'ஜிப்ஸி'யை பார்க்­க­வில்லை. அநே­க­மாக அடுத்த சில தினங்­களில் பார்த்­து­விட்டு விமர்­சிப்­ப­தாக கூறி­யுள்­ள­னர். அதற்­காக காத்­தி­ருக்­கி­றேன். படம் அவர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்," என்று நடாஷா எதிர்­பார்ப்­பு­க­ளு­டன் சொல்­கி­றார்.