தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் வெளியாகிறது 'தாராள பிரபு'

1 mins read
f2ec5856-0862-43af-a53f-d815d7cf7e90
'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப், ஹரிஷ் கல்யாண். படம்: ஊடகம் -

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய 'தாராள பிரபு' கொரோனா பீதியால் பாதிக்கப்பட்டுள்ளது.

திடீரென மார்ச் 31ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் திரையரங்குகளை மூடவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதால் இப்படத்தின் வசூல் குறைந்துபோனது. இந்நிலையில் இப்படம் மீண்டும் வெளியாகும் என பட நாயகன் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 'தாராள பிரபு' படத்துக்கு ரசிகர்கள் அளித்துவந்த போற்றுதலுக்குரிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இன்று உலகையே கொரோனா கிருமித்தொற்று நிலைகுலைய வைத்துள்ளது. தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் இந்திய அரசும் உலகளவில் பல்வேறு நாடுகளும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

"இந்த இக்­கட்­டான சூழ­லைக் கடந்­த­பின் 'தாராள பிரபு' மீண்­டும் வெளி­யா­கும். அந்­தச் சம­யத்­தி­லும் ரசி­கர்­க­ளின் மேலான ஆத­ரவை எதிர்­நோக்­கு­கி­றோம். அனை­வ­ரும் பாது­காப்­பாக இருக்க இறை­ய­ருள் துணை நிற்­கட்­டும்," என ஹரிஷ் கல்­யாண் தமது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்­ட­தால் மேலும் சில படங்­கள் வசூல் ரீதி­யில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. எனவே கொரோனா விவ­கா­ரம் முடி­வுக்கு வந்த பிறகு தங்­கள் படங்­களை மீண்­டும் வெளி­யிட அனு­ம­திக்க வேண்­டு­மென அவற்­றின் தயா­ரிப்­புத் தரப்பு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

இதற்­கி­டையே விஜய் நடித்­துள்ள 'மாஸ்­டர்' பட­மும் ஏற்­கெ­னவே அறி­வித்­த­படி குறித்த தேதி­யில் வெளி­யா­குமா எனும் சந்­தே­கம் எழுந்­துள்­ளது. இது தொடர்­பான அறி­விப்­புக்­காக விஜய் ரசி­கர்­கள் காத்­தி­ருக்­கி­றார்­கள்.