'ஜிமிக்கி கம்மல்' நாயகி

'ஜிமிக்கி கம்மல்' நாயகி

3 mins read
e391cfd0-e018-4ba7-a52f-0201d86b6dda
தமிழ் திரையுலக ரசி­கர்­க­ளின் தூக்­கத்­தைக் கெடுக்க வந்­தி­ருக்­கும் புதிய நாயகி ஷிரின் காஞ்ச்­வாலா.  படம்: ஊடகம் -

தமிழ் திரையுலக ரசி­கர்­க­ளின் தூக்­கத்­தைக் கெடுக்க வந்­தி­ருக்­கும் புதிய நாயகி ஷிரின் காஞ்ச்­வாலா.

அண்­மை­யில் வெளி­யான 'வால்­டர்' படத்­தின் நாயகி. இதற்கு முன்பு 'நெஞ்­ச­முண்டு நேர்­மை­உண்டு ஓடு ராஜா' படத்­தில் நடித்­தி­ருக்­கி­றார்.

ஷிரின் பிறந்து வளர்ந்­தது, படித்­தது எல்­லாம் மும்­பை­யில். தந்தை சொந்­த­மா­கத் தொழில் செய்­கி­றார். அம்மா இல்­லத்­த­ரசி. மூத்த, இளைய சகோ­த­ரர்­கள் உள்­ள­னர். பட்­டப்­ப­டிப்பை முடித்த கையோடு மூன்­றாண்­டு­கள் விமா­னப் பணிப்­பெண்­ணா­கப் பணி­யாற்­றி­யுள்­ளார் ஷிரின். பிறகு விளம்­ப­ரப் படங்­களில் நடித்­தா­ராம்.

"அப்­போது தோழி­கள் எல்­லாம் சேர்ந்து விளை­யாட்­டாக சில புகைப்­ப­டங்­கள் எடுத்து சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டு­வது வழக்­கம். அந்­தப் படங்­களில் சில இணை­யத்­தில் வைர­லா­கின. அவற்­றைப் பார்த்­து­விட்டு சில இயக்­கு­நர்­கள் தேடி­வந்­த­னர். இப்­ப­டித்­தான் சினி­மா­வில் நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது," என்­கி­றார் ஷிரின்.

இவர் அறி­மு­க­மா­னது கன்­ன­டப் படத்­தில். 'விராஜ்' என்ற அந்­தப் படம் நல்ல வசூல் கண்­ட­தாம். அதன் பிறகு சிவ­கார்த்­தி­கே­யன் தயா­ரித்த 'நெஞ்­ச­முண்டு நேர்­மை­யுண்டு' பட வாய்ப்பு தேடி­வந்­துள்­ளது. இதில் தொலைக்­காட்சி நிரு­ப­ராக நடித்த வகை­யில் ஷிரி­னுக்கு கோடம்­பாக்­கத்­தில் நல்ல பெயர் கிடைத்­தி­ருக்­கிறது. தற்­போது அன்பு இயக்­கத்­தில் 'வால்­டர்' படம் வெளி­யாகி உள்­ளது.

"சிபி­ராஜ் காவல்­துறை அதி­கா­ரி­யா­க­வும், நான் தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் பணி­யாற்­றும் பெண்­ணா­க­வும் நடித்­துள்ளேன். எங்­கள் இரு­வ­ருக்­கும் இடையே மல­ரும் காதல், சில பிரச்­சி­னை­கள் என்று வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளம்.

"என் நடிப்­புக்கு நல்ல பெயர் கிடைத்­தி­ருக்­கிறது. ஒளிப்­ப­தி­வா­ளர் நட­ராஜ் என்ற நட்டி, சிபி­ராஜ், சமுத்­தி­ர­கனி என்று நல்ல அனு­ப­வம் வாய்ந்­த­வர்­க­ளு­டன் நடித்­தது மகிழ்ச்சி அளிக்­கிறது. புது­மு­க­மா­கக் கரு­தா­மல் நட்­பா­கப் பழ­கி­னர். அவர்­க­ளி­டம் இருந்து நிறைய கற்­றுக் கொண்­டேன்," என்­று­ சொல்­லும் ஷிரின், அடுத்து சந்­தா­னத்­து­டன் 'டிக்­கி­லோனா' படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

மேலும் விம­லு­டன் 'மஞ்­சள் குடை' படத்­தில் நடிக்க உள்­ளா­ராம். இவை தவிர, மேலும் இரண்டு படங்­க­ளைக் கைவ­சம் வைத்­துள்­ளார். அவை குறித்து விரை­வில் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கும் எனத் தக­வல்.

வரி­சை­யாக பல படங்­களில் நடிக்­க­வேண்­டும், லட்­சக்­க­ணக்­கில் சம்­பா­திக்க வேண்­டும் என்­றெல்­லாம் ஷிரி­னுக்கு எந்த ஆசை­யும் இல்லை. சில படங்­களில் நடித்­தா­லும் நல்ல நடிகை என்று பெய­ரெ­டுப்­பது மட்­டுமே தனது லட்­சி­யம் என்­கி­றார்.

"குறிப்­பாக, கதா­நா­ய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் கதை­களில் நடிக்க விரும்­பு­கி­றேன். நயன்­தாரா, ஜோதிகா ஆகி­யோர் இப்­படி ஒரு முடிவை எடுத்து தைரி­ய­மா­கச் செயல்­ப­டுத்தி வரு­கி­றார்­கள். ஆனால், நான் இப்­போ­து­தான் நடிக்­கத் துவங்கி உள்­ளேன்.

"எனவே, நிபந்­தனை எல்­லாம் விதிக்க முடி­யாது. எனி­னும் அவர்­க­ளைப் போல் நடிக்­க­வேண்­டும் என்­பதை மன­தில் வைத்­தி­ருந்து சாதிக்க முயற்சி செய்­வேன்," என்று சொல்­லும் ஷிரி­னுக்கு, இந்தி நடிகை கரீனா கபூரை ரொம்­பப் பிடிக்­கு­மாம். நடி­கர்­களில் சல்­மான்­கான் ரசி­கை­யாம். தமி­ழில் 'நயன்­தா­ரா­தான் என் உயிர்' என்­கி­றார்.

எப்­போ­தும் பளிச் என்று காட்சி தரு­வ­தன் ரக­சி­யம் என்ன?

"பெரி­தாக ஒன்­று­மில்லை. நான் அணி­யும் ஜிமிக்கி கம்­மல்­தான் அந்த ரக­சி­யம். இதை அணி­வது என்­றால் ரொம்­பப் பிடிக்­கும். எப்­போ­துமே இதை அணிந்­தி­ருக்க வேண்­டும் என விரும்­பு­வேன். வளை­யல், நெக்­லஸ் போன்­ற­வற்­றில் பெரி­தாக விருப்­ப­மில்லை.

"அதே­போல் உடை என்று எடுத்­துக் கொண்­டால் புட­வை­தான் பிடித்­த­மான தேர்வு. திரு­ம­ணம் உள்­ளிட்ட எந்த நிகழ்­வாக இருந்­தா­லும் புட­வைக்­கு­த்தான் முன்­னு­ரிமை. அதற்­காக மற்ற உடை­கள் பிடிக்­காது என்று அர்த்­த­மில்லை. மேல் சட்டை, ஜீன்ஸ் போன்­ற­வை­யும் பிடிக்­கும்.

"என்­னைப் பொறுத்­த­வரை ஆள் பாதி ஆடை பாதி என்­பேன். இதை மறக்­கா­மல் இருந்­தால், பெண்­கள் எப்­போ­துமே அழ­கா­கக் காட்சி தர­முடி­யும்," என்­கி­றார் இளம் நாயகி ஷிரின்.