'இது குடும்பத்துக்கான நேரம்'

'இது குடும்பத்துக்கான நேரம்'

3 mins read
9d89efbd-6fb5-4698-bcff-7017eeec84e3
கொரோனா தாக்­கத்­தால் படப்­பி­டிப்­பு­கள் தடைபட்டு, திரை­யு­ல­கக் கலை­ஞர்­கள் வீட்­டி­லேயே பொழு­தைக் கழிக்க நேரிட்­டுள்­ளது. வெளி­நாடு செல்­வ­தற்­கும் அச்­சப்­ப­டு­வ­தால் எல்­லோ­ருமே வீட்­டில்­தான் முடங்கி உள்­ள­னர். இது குடும்­பத்­துக்­கான நேரம் என்­பதை உணர்ந்­துள்­ள­தா­கச் சொல்­கின்­ற­னர் என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம் -

கொரோனா தாக்­கத்­தால் படப்­பி­டிப்­பு­கள் ரத்­தாகி திரை­யு­ல­கக் கலை­ஞர்­கள் வீட்­டி­லேயே பொழு­தைக் கழிக்க நேரிட்­டுள்­ளது. வெளி­நாடு செல்­வ­தற்­கும் அச்­சப்­ப­டு­வ­தால் எல்­லோ­ருமே வீட்­டில்­தான் முடங்கி உள்­ள­னர். இது குடும்­பத்­துக்­கான நேரம் என்­பதை உணர்்்ந்­துள்­ள­தா­கச் சொல்­கின்­ற­னர்.

கட்­டா­யத் தனி­மைப்­ப­டுத்­த­லில் உள்ள இவர்­கள் எப்­படி பொழு­தைக் கழிக்­கி­றார்­கள் என்­ப­தைப் பார்ப்­போம்.

நாள் முழுக்க தொலைக்­காட்­சியில் வரக்­கூ­டிய கொரோனா கிருமி குறித்த செய்­தி­க­ளைத்­தான் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றா­ராம் நடிகை வாணி போஜன்.

தன் வீட்­டில் வேலைக்கு வரும் பணி­யா­ளர்­கள், காய்­கறி விற்­கும் அண்­ணன், பக்­கத்து வீட்­டுக் குழந்­தை­கள் என்று தாம் பார்க்­கும் அனை­வ­ரி­ட­மும் கிரு­மித் தொற்­று கு­றித்து புரியும் வகை­யில் விளக்­கு­கி­றா­ராம்.

"ஆனால் அம்­மா­வுக்கு இது பிடிக்­க­வில்லை. ஏன் எல்­லோ­ரி­ட­மும் பீதி கிளப்­பு­கி­றாய் என்று ஏசு­கி­றார். பீதிக்­கும் விழிப்­பு­ணர்­வுக்­கும் உள்ள வித்­தி­யா­சத்தை அவ­ருக்­குப் புரிய வைத்­துள்­ளேன். இந்­தப் பணியை அனை­வ­ரும் செய்­ய ­வேண்­டும்," என்­கி­றார் வாணி போஜன்.

நாம் மட்­டும் விழிப்­பாக இருந்­தால் போதாது என்­றும் சுற்றி இருப்­ப­வர்­களும் சுத்­த­மாக, பாது­காப்­பாக இருப்­பது குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த வேண்­டும் என்­கி­றார் பிரியா ஆனந்த். தாத்தா, பாட்­டி­யோடு நேரம் செல­விட கிடைத்­தி­ருக்­கும் வாய்ப்பை அனை­வ­ரும் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­து­கி­றார்.

"கொரோனா கிருமி குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தில் கைபே­சி­கள், இணை­யம், சமூக வலைத்­த­ளங்­கள் முக்­கி­யப் பங்­காற்­று­கின்­றன. அவற்­றின் வழி நம்மை வந்து சேரும் நல்ல தக­வல்­கள், படங்­கள் வேடிக்­கை­யான காணொளிப் பதி­வு­கள் இந்­தச் சம­யத்­தில் நமக்கு நல்ல பொழுது­போக்கு அம்­சங்­க­ளாக உள்­ளன.

"இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி நிறைய புத்­த­கங்­கள் படிக்­கி­றேன். பர­ப­ரப்­பான வாழ்க்­கைக்கு மத்­தி­யில் கிடைத்த ஓய்வை எனக்­குப் பய­னுள்ள வகை­யில் பயன்­ப­டுத்­து­கி­றேன்," என்­கி­றார் பிரியா ஆனந்த்.

நடிகை ஷ்ருதி ஹாசன், அவ­ரது சகோ­தரி அக்­‌ஷரா, தந்தை கமல், தாய் சரிகா ஆகிய நால்­வ­ரும் நான்கு வெவ்­வேறு இடங்­களில் தங்­களை சுய­மா­கத் தனி­மைப்­ப­டுத்­திக் கொண்டு நாட்­க­ளைக் கடத்­து­கி­றார்­க­ளாம். தனி­மை­யில் தங்­கி­யி­ருப்­பது தனக்­கொன்­றும் புதி­தல்ல என்­கி­றார் ஷ்ருதி.

"அண்­மை­யில்­தான் லண்­ட­னில் இருந்து திரும்­பி­னேன். அம்மா மும்­பை­யி­லும் அப்­பா­வும் அக்­‌ஷ­ரா­வும் சென்­னை­யில் வெவ்­வேறு வீடு­க­ளி­லும் தனி­யாக உள்­ள­னர். நானும் மும்­பை­யில் தனியே உள்­ளேன். எங்­கள் நால்­வ­ருக்­கும் வெவ்­வேறு பய­ணத் திட்­டம் இருப்­ப­தால் ஒரே இடத்­தில் தனி­மைக்­குள்­ளாகி வசிப்­ப­தில் அர்த்­த­மில்லை எனக் கரு­தி­னோம். என்­னைப் பொறுத்­த­வரை ஒவ்­வொ­ரு­வ­ரும் இது­போன்று முடி­வெ­டுப்­பது நல்­லது," என்­கி­றார் ஷ்ருதி.

இப்­படி ஒரு சூழல் வரும் என யாருமே எதிர்­பார்க்­க­வில்லை என்­கி­றார் அருண் விஜய். நாம் எந்­த­ளவு பாது­காப்­பாக இருக்­கி­றோமோ அது­தான் பிற­ருக்கு நாம் கொடுக்­கும் பாது­காப்பு எனக் கரு­து­வ­தா­க­வும் சொல்­கி­றார்.

"உடற்­ப­யிற்­சிக் கூடங்­களை மூடி­விட்­ட­தால் வீட்­டி­லேயே உடற்­ப­யிற்சி செய்­கி­றேன். குடும்­பத்­தோடு அதிக நேரத்­தைச் செல­வி­டு­வ­தற்­கான நல்ல வாய்ப்­பாக இதைக் கரு­து­கி­றேன். எல்­லோ­ரு­டைய வீட்­டி­லும் முதி­ய­வர்­க­ளைப் பத்­தி­ர­மா­கப் பார்த்­துக்­கொள்ள வேண்­டி­யது நம் பொறுப்பு," என்­கி­றார் அருண் விஜய்.

கிரு­மித் தொற்று பயத்­தால் அடிக்­கடி கைக­ளைக் கழு­வு­கி­றா­ராம் விவேக்.

"பொது­வா­கவே இந்­திய மக்­க­ளுக்கு சுகா­தா­ரம் பற்­றிய விழிப்­பு­ணர்வு குறைவு. சிலர் குப்­பை­கள் குவிந்­தி­ருக்­கும் இடத்­தி­லேயே உட்­கார்ந்து பேசிக்­கொண்­டி­ருப்­பார்­கள். சிலர் அங்­கேயே வாழ­வும் செய்­கி­றார்­கள்.

"தூசுப்­பட்ட மெது­வடையை தேநீர்க்­க­டை­யில் நின்று சாப்­பிட்­ட­படி பேசு­கிறார்­கள். கொரோனா கிருமி குறித்து அச்­சப்­ப­டத் தேவை­யில்லை. அதே­ச­ம­யம் அலட்­சி­ய­மும் கூடாது. நான் வீட்­டில் இப்­போது அதிக புத்­த­கங்­கள் படிக்­கி­றேன். நான் இயக்­கும் படத்­துக்­கான கதையை எழு­து­வ­தி­லும் கவனம் செலுத்­து­வேன். சில நகைச்­சு­வைக் கதா­பாத்­தி­ரங்­­களை எப்­படி மெரு­கேற்­ற­லாம் என்­பது குறித்­தும் யோசித்து வரு­கி­றேன்," என்­கி­றார் விவேக்.

இயக்­கு­நர் சுசீந்­தி­ரன் இந்­தக் கட்­டாய ஓய்­வைப் பயன்­ப­டுத்தி குடும்­பத்­து­டன் சொந்த ஊரான ஒட்­டன்­சத்­தி­ரத்­துக்கு வந்­து­விட்­டா­ராம். வீடு, தோட்­டம் என்று வலம் வரு­ப­வர் வெளியே எங்­கே­யும் செல்­வ­தில்லை.

"நம் மண், நம் தோட்­டம். அவை இரண்­டும் நம்­மைப் பாது­காக்­கும். தங்கை வீட்­டார் குடும்­பத்­து­டன் வந்­தி­ருக்­கி­றார்­கள்.

"நீண்ட நாட்­க­ளுக்­குப் பிறகு எல்­லோ­ரும் ஒரே வீட்­டில் ஒரே குடும்­ப­மாக நாட்­க­ளைக் கடத்­து­கி­றோம்," என்­கி­றார் சுசீந்­தி­ரன்.