பிரிந்த தம்பதியரை சேர்த்துவைத்த கொரோனா கிருமி

1 mins read
47c2edbb-db08-455d-9237-de5464dcc1a8
மணமுறிவு செய்துகொண்டு பிரிந்துவாழ்ந்த ஹிருத்­திக் ரோஷன், சுசானாவையும் கொரோனா கிருமி ஒன்றுசேர்த்து வைத்துள்ளது. படம்: ஊடகம் -

கொரோனா கிரு­மி­யால் சில நல்ல விஷ­யங்­களும் நடக்­கின்­றன. குடும்­பத்­தார் அனை­வ­ரும் வீட்­டி­லேயே இருப்­ப­தால் குடும்ப உற­வு­கள் வலுப்­படும்.

மணமுறிவு பெற்று பிரிந்த நட்­சத்­திர தம்­ப­தி­யரை ஒன்று சேர்த்து வைத்­துள்­ளது கொரோனா கிருமி.

இந்தி நடி­கர் ஹிருத்­திக் ரோஷன், சுசானா தம்­ப­திக்கு 2000ல் திரு­ம­ணம் நடந்­தது. இரண்டு மகன்­கள் உள்­ள­னர்.

கருத்து வேறு­பாடு கார­ண­மாக இவர்­கள் 2014ல் விவா­க­ரத்து செய்து பிரிந்­தார்­கள். மகன்­கள் ஹிருத்­திக் ரோஷ­னு­டன் வசித்து வரு­கி­றார்­கள்.

ஊர­டங்கு உத்­த­ர­வின் போது தனது மகன்­கள் வீட்­டில் தனி­மை­யில் முடங்கி சிர­மப்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­காக ஹிருத்­திக் ரோஷ­னின் வீட்­டுக்கு வந்து அவர்­க­ளுக்­குத் துணை­யாக இருக்­கி­றார் சுசானா.

அவர் தனது வீட்­டுக் கட்­டி­லில் காப்பி குடித்­த­படி இருக்­கும் புகைப்­ப­டத்தை ஹிருத்­திக் ரோஷன் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் வெளி­யிட்­டுள்­ளார்.

"நாட்­டில் ஊர­டங்கு உத்­த­ரவு அம­லில் இருக்­கும் நிலை­யில், எனது முன்­னாள் மனைவி சுசானா எங்­கள் குழந்­தை­க­ளுக்­காக தானாக முன்­வந்து எனது வீட்­டில் தங்கி இருக்­கி­றார். அவ­ருக்கு நன்றி," என்று பதி­விட்­டுள்­ளார்.

தாய் சுசானா வீட்­டிற்கு வந்த பிறகு மகன்­கள் இரு­வ­ரி­ட­மும் உற்­சா­கம் பிடி­ப­ட­வில்லை என்று தனக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளி­டம் கூறி வரு­கி­றா­ராம் ஹ்ருத்­திக்.

நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு பிரிந்த தம்­ப­தி­யர் மகன்­க­ளின் நல­னுக்­காக ஒன்று சேர்ந்­துள்ள நிலை­யில், இது தொடர்­பாக ரசி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் கருத்­து­க­ளைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

ஹ்ருத்­திக் ரசி­கர்­கள் பல­ரும் உற்­சா­கத்­து­டன் பின்­னூட்­ட­மிட்டு வரு­கின்­ற­னர்.