இக்கட்டில் உதவும் நல்ல உள்ளங்கள்

இக்கட்டில் உதவும் நல்ல உள்ளங்கள்

2 mins read
09062237-152a-4e6f-bbc9-cc09226f1ea5
அந்த வகை­யில் நடிகை சம்­யுக்தா தினந்­தோ­றும் ஆத­ர­வின்­றிப் பல்­வேறு நக­ரங்­களில் சுற்­றித் திரி­யும் தெரு­நாய்­கள் குறித்­து கவ­லைப்­ப­டு­கி­றார். இப்­ப­டி கவலைப்­ப­டு­வ­தோடு நிற்­கா­மல், அவற்­றுக்கு உணவளிக்க வேண்­டும் என்­றும் முடிவு செய்து அதைச் செயல்­ப­டுத்தி வரு­கி­றார்.  -

கொரோனா கிரு­மித் தொற்று பர­வ­லைத் தடுக்க ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட நிலை­யில் 21 நாட்­களும் வீட்­டில் எப்­படி பொழு­தைக் கழிக்­க­லாம் என்­பது குறித்தே பெரும்­பா­லான திரைக்­க­லை­ஞர்­கள் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் இந்த வாய்ப்­பை பயன்­ப­டுத்தி மக்­க­ளுக்­கும் சமூ­கத்­துக்­கும் எவ்­வாறு முடிந்த உத­வி­க­ளைச் செய்­ய­லாம் என்­பது குறித்­தும் சிலர் யோசிப்­பது நல்ல விஷ­யம்.

அந்த வகை­யில் நடிகை சம்­யுக்தா தினந்­தோ­றும் ஆத­ர­வின்­றிப் பல்­வேறு நக­ரங்­களில் சுற்­றித் திரி­யும் தெரு­நாய்­கள் குறித்­து கவ­லைப்­ப­டு­கி­றார். இப்­ப­டி கவலைப்­ப­டு­வ­தோடு நிற்­கா­மல், அவற்­றுக்கு உணவளிக்க வேண்­டும் என்­றும் முடிவு செய்து அதைச் செயல்­ப­டுத்தி வரு­கி­றார்.

கடந்த ஒரு வார கால­மாக நாய்­கள் உண­வின்­றிப் போராடி வரு­வ­தைக் கண்டு மன­மு­டைந்து போன­தாக தமது சமூகவலைத்­த­ளப் பதிவு ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நானும் நல்ல மனம் கொண்ட சில­ரும் சேர்ந்து பெங்­க­ளூ­ரு­வில் சுற்­றித் திரி­யும் தெரு­நாய்­க­ளைக் கணக்­கெ­டுத்து அவற்­றுக்கு உண­வ­ளித்து வரு­கி­றோம். இதற்கு பெங்­க­ளூரு தெற்கு தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எங்­க­ளுக்கு உத­வி­க­ர­மாக இருக்­கி­றார்.

"பொது­மக்­கள் தங்­க­ளைப் பாது­காப்­ப­து­டன் இத்­த­கைய பணி­க­ளை­யும் மேற்­கொள்ள வேண்­டும் என கேட்­டுக்கொள்­கி­றேன்," என தமது பதி­வில் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

அவ­ரது இந்­தச் சேவை­யைப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் பாராட்­டி­யுள்­ள­னர். நடிகை மஞ்சு வாரி­யர் கேர­ளா­வில் ஊர­டங்­கால் கஷ்­டப்­படும் திரு­நங்­கை­கள் குறித்து கவலை கொண்­டுள்­ளார். சில தினங்­க­ளுக்கு முன்பு திரு­நங்­கை­க­ளின் வீட்­டுக்­குத் தேவை­யான அரிசி, மளி­கைப் பொருட்­களை வாங்­கிக் கொடுத்­துள்­ளா­ராம்.

இது­கு­றித்து மஞ்சு வாரி­யர் ஏதும் தெரி­விக்­க­வில்லை. ஆனால், கொச்­சி­யைத் தலை­மை­யி­ட­மா­க கொண்டு செயல்­படும் திரு­நங்­கை­க­ளுக்­கான அமைப்பின் தலை­வி­யும் ஒப்­ப­னைக் கலை­ஞ­ரு­மான ரெஞ்சு ரெஞ்­சி­மர் இதுபற்றிய விவ­ரம் தெரி­வித்­துள்­ளார்.

திரு­நங்­கை­கள் எந்த வேலை­யும் பண­மும் இன்றி மிகுந்த சிர­மத்­தில் இருப்­ப­தாக மஞ்­சு­வைத் தொடர்பு கொண்டு சொன்ன மறு­தி­னமே அரிசி உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை அனுப்பி வைத்­தா­ராம். அவற்­றைத் தங்­கள் அமைப்­பில் உள்ள உறுப்­பி­னர்­க­ளுக்கு விநி­யோ­கித்­த­தாக தமது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார் ரெஞ்சு ரெஞ்­சி­மர்.

நடி­கர் விமல் தமது சொந்த ஊரில் கிரு­மித் தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க கிருமி நாசினி தெளிக்­கும் பணி­யில் ஈடு­பட்­டார். திருச்சி மாவட்­டம் மணப்­பா­றையை அடுத்­துள்ள பன்­னாங்­கொம்பு பகு­தி­யைச் சேர்ந்­த­வர் விமல்.

இங்கு கிருமி நாசினி தெளிக்­கும் பணியை மேற்­கொள்­ளப் போவ­தாக மாவட்ட நிர்­வா­கம் அறி­வித்­தி­ருந்­தது. இதை­ய­றிந்த விமல் உட­ன­டி­யாக சொந்த ஊருக்கு விரைந்­தார். அங்­குள்ள இளை­ஞர்­களை ஒருங்­கி­ணைத்து ஒவ்­வொரு தெரு­வா­கச் சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணி­யில் ஈடு­பட்­டார்.

மேலும் கண்­ணில் பட்ட ஊர் மக்­கள் அனை­வ­ரி­ட­மும் சமூக வில­கல் குறித்து விழிப்­பு­ணர்வு பிர­சா­ர­மும் மேற்­கொண்­டார். சினி­மா­வில் மட்­டுமே நடிக்­கா­மல் நிஜ வாழ்க்­கை­யி­லும் களப்­ப­ணி­யில் ஈடு­பட்ட அவ­ரைப் பல­ரும் பாராட்­டி­யுள்­ள­னர்.