படப்பிடிப்பு இல்லாததால் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடிகிறது என மகிழ்கிறார் நடிகர் சூரி. அதேசமயம் கொரோனா கிருமித் தொற்று குறித்த காணொளிப் பதிவுகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் தாம் பிரியாணி சமைக்கும் ஜாலியான காணொளியையும் வெளியிட்டுள்ளார் சூரி. தான் சமைத்த பிரியாணியை ருசி பார்க்குமாறு கேட்டுக்கொள்ள, அவர் மனைவியும் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு தூ எனத் துப்புகிறார். உடனே சூரி, ‘என்னாச்சு?’ என்று கேட்க, ‘வாயில உப்பு’ என்கிறார் அவர் மனைவி.
‘வாயில உப்பை எதற்கு எடுத்துப் போட்ட? கறியை சாப்பிட வேண்டியதுதானே?’ என்று கூறி கிண்டலடிக்கிறார்.
இந்தக் காணொளிப் பதிவு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இதற்கிடையே கிராமப்புற மக்களுக்கு கொரோனா கிருமித் தொற்று குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் சூரி கவலைப்படுகிறார்.
“பிறருடன் பழகாமல் இருப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். இருப்பினும் இதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்,” என காணொளிப் பதிவு ஒன்றில் சூரி குறிப்பிட்டுள்ளார்.