மணிலா: பிலிப்பீன்சில் புதிதாக 414 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. கிருமித்தொற்று பாதிப்பால் மேலும் 11 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டில் இதுவரை 3,660 பேரைக் கிருமி தொற்றியுள்ளது. கிருமித்தொற்றுக்கு இதுவரை 163 பேர் மரணமடைந்தனர்.
பிலிப்பீன்சில் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 73 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், பிலிப்பீன்சில் கிருமித்தொற்று சம்பவங்கள் குறையாததால், லுஸோன் தீவு முடக்கநிலை நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

