'நாம் சொல்லவேண்டிய கதை'

'நாம் சொல்லவேண்டிய கதை'

3 mins read
b5fb7fe6-adec-4a0c-832b-5e641d7cf853
நடிகை ஆன்ட்­ரியா தற்­போது நாம் அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக்­கும் இக்­கட்­டான காலம் குறித்து நமது பேரக்­கு­ழந்­தை­க­ளி­டம் விவ­ரம் சொல்ல வேண்­டும் எனக் கூறி­யுள்­ளார்.  படம்: ஊடகம் -

கொரோனா கிரு­மித் தொற்று ஒழி­ய­வேண்­டும் என ஆளா­ளுக்­கு வழிபாடுகளில் ஈடு­பட்­டி­ருக்­கும் நிலை­யில் கொரோ­னா­வுக்­குப் பிற­கான காலம் குறித்­தும் சிலர் யோசிக்­கத் தொடங்கிவிட்­ட­னர்.

அந்த வகை­யில் நடிகை ஆன்ட்­ரியா தற்­போது நாம் அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக்­கும் இக்­கட்­டான காலம் குறித்து நமது பேரக்­கு­ழந்­தை­க­ளி­டம் விவ­ரம் சொல்ல வேண்­டும் எனக் கூறி­யுள்­ளார்.

இந்­தப் பித்து பிடிக்­கும் சூழலை எப்­ப­டிக் கையாண்­டோம் என்­பதே நமது பேரக்­கு­ழந்­தை­கள் கேட்க விரும்­பும் கதை­யாக இருக்­கும் என சமூக வலைத்­த­ளப் பதிவு ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நமது வேலை­கள், வழக்­க­மான காலை நடைப்­ப­யிற்சி, நீண்­ட­தூ­ரப் பய­ணம், பிடித்த உண­வ­கங்­களில் உணவு, பிறந்­த­நாள் விழாக்­கள், வீட்­டுக் கொண்­டாட்­டங்­கள், சுற்­றுலா மற்­றும் நமது உயிர்­கள் என அனைத்­துக்­கும் அச்­சு­றுத்­தல் நில­வும் காலம் இது.

"நாம் தற்­போது வாழ்ந்து கொண்­டி­ருக்­கும் இந்­தக் காலம் குறித்து என்­றே­னும் ஒரு­நாள் நமது பேரக் ­குழந்­தை­க­ளி­டம் விவ­ரம் சொல்­வோம்," என ஆன்ட்­ரியா குறிப்­பிட்­டுள்­ளார்.

இவ்­வ­ளவு குழப்­பத்­துக்­கும் மத்­தி­யில் தனி­மை­யில் நாம் அனை­வ­ரும் ஒற்­று­மை­யாக நல்­ல­றி­வைத் தேர்ந்­தெ­டுத்­தோமா? பொறா­மையை விடுத்து பச்­சா­தா­பத்­தைத் தேர்வு செய்­தோமா? பேரா­சையை விடுத்து பெருந்­தன்­மை­யின் பக்­கம் நின்­றோமா? என்­பதே முக்­கி­யம் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் நம்­மால் இரண்டு விஷ­யங்­களை செய்ய முடி­யும் எனச் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார்.

"ஒன்று கற்­ப­னை­யாக, நம் அனு­ப­வத்­தைச் சொல்­ல­லாம். அல்­லது வாழ்ந்து காட்­ட­லாம். வீட்­டி­லி­ருந்­தோம், சமூக ஊட­கங்­க­ளால் சோர்­வுற்­றோம், சலித்­துப் போய் படைப்­பாற்­ற­லோடு இருந்­தோம், பால்­க­னி­களில் நின்று வெளியே சேவை செய்து கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்­காக பாடல் பாடி­னோம், கைதட்­டி­னோம் என்று பேரக்­கு­ழந்­தை­க­ளி­டம் நாம் சொல்­ல­லாம்.

"ஒரு புதிய நாளைப் பார்க்க நாம் உயிர் பிழைத்­தோம் என்று இந்­தக் கதை­யைச் சொல்லா­தீர்­கள்," என்று ஆன்ட்­ரியா தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

நடிகை காஜல் அகர்­வா­லும் தமது சமூக வலைத்­தளப் பதி­வில் கொரோனா கிரு­மித் தொற்று ஆபத்து முற்­றி­லும் நீங்­கிய பிறகு என்­ன­வெல்­லாம் செய்­ய­லாம் என தமது கருத்­து­க­ளைத் தெரி­வித்­துள்­ளார்.

உள்­ளூர் உண­வ­கங்­களில் சாப்­பி­ட­லாம், இந்­தி­யா­வில் விளை­யும் காய்­கறி, மற்­றும் பழங்­களை மட்­டுமே வாங்­க­லாம். உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட ஆடை மற்­றும் கால­ணி­களை வாங்கி அணி­ய­லாம் என அவர் பட்­டி­ய­லிட்­டுள்­ளார்.

இத்­த­கைய செயல்­பாடு உள்­ளூர் வணி­கர்­க­ளுக்கு உத­வி­யாக இருக்­கும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், இவ்­வாறு ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உத­வி­னால் நாடு மென்­மே­லும் வளர்ச்சி அடை­யும் என தெரி­வித்­துள்­ளார்.

விடு­மு­றை­களை உள்­நாட்­டி­லேயே கழிக்­க­வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், சக மனி­தர்­க­ளின் உத­வி­யின்றி நாட்­டி­லுள்ள வியா­பா­ரி­கள் மீண்­டும் எழுந்து நிற்க சிர­மப்­ப­டு­வார்­கள் என்று சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"கொரோனா கிரு­மித் தொற்று பர­வல் முடி­வுக்கு வரும்­போது, அதன் அழி­வில் நமக்­கான ஆபத்­தும் முடி­வுக்கு வரும். அப்­போது நாட்டு நல­னுக்­காக நாம் அனை­வ­ரும் ஏதே­னும் ஒன்­றைச் செய்ய வேண்­டும்," என்று காஜல் தமது சமூக வலைத்­த­ளப் பதி­வில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதே போல் ரகுல் பிரீத் சிங், நிக்கி கல்­ராணி, ஐஸ்­வர்யா ராஜேஷ் உள்­ளிட்ட மேலும் பல முன்­னணி நாய­கி­கள் கொரோனா கிரு­மித் தொற்று குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

மேலும் அடுத்த தலை­மு­றைக்கு இத்­த­கைய கிரு­மித் தொற்­று­கள் ஏற்­ப­டா­மல் இருக்க என்ன செய்ய வேண்­டும் என்­பதை பெரி­ய­வர்­கள் எடுத்­துச் சொல்ல வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இது தொடர்­பாக அரசு மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்க வேண்­டி­யது அவ­சி­யம் என இளம் நாய­கி­கள் கூறி­யுள்­ள­னர்.

இதே போல் முன்­னணி நடி­கர்­கள் பல­ரும் இது­போன்ற கருத்­து­களை தங்­க­ளது சமூக வலைத்­த­ளப் பக்­கங்­களில் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.