தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேறு மாதிரி பரவிய படம்

3 mins read
33f04bff-cc92-44a0-99c2-5d7435706cf8
சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யான ஒரு புகைப்­ப­டம் நடிகை அனு­பமா பர­மேஸ்­வ­ர­னுக்கு கடும் கோபத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. குறிப்­பிட்ட அந்­தப் படத்­தில் இருப்­பது தாம் அல்ல என்று அவர் விளக்­க­ம­ளித்­துள்­ளார்.  படம்: ஊடகம் -

திரைப்­ப­டத் துறை­யி­னர் குறித்து வெளி­யா­கும் புகைப்­ப­டங்­களும் காணொ­ளிப் பதி­வு­களும் எப்­போ­துமே ரசி­கர்­கள் மத்­தி­யில் ஒரு­வித பர­ப­ரப்­பை­யும் எதிர்­பார்ப்­பை­யும் ஏற்­ப­டுத்­து­வது வழக்­கம். அதே­ச­ம­யம் இவற்­றால் சில சர்ச்­சை­களும் வெடிப்­ப­துண்டு.

இந்­நி­லை­யில் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யான ஒரு புகைப்­ப­டம் நடிகை அனு­பமா பர­மேஸ்­வ­ர­னுக்கு கடும் கோபத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. குறிப்­பிட்ட அந்­தப் படத்­தில் இருப்­பது தாம் அல்ல என்று அவர் விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

சமூக வலைத்­த­ளங்­களில் இவர் தீவி­ர­மாக இயங்கி வந்த நிலை­யில் சில விஷ­மி­கள் இவ­ரது ஃபேஸ்புக் பக்­கத்தை முடக்கி உள்­ள­னர். இதை­ய­டுத்து அதில் இடம்­பெற்­றி­ருந்த அனு­ப­மா­வின் படத்தை கணினி தொழில்­நுட்­பம் மூலம் மாற்­றி­ய­மைத்­துள்­ள­னர். இதை­ய­டுத்து அந்­தப் படம் இணை­யத்­தில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டது.

அப்­ப­டத்­தைக் கண்ட அனு­பமா பத­றிப்­போ­னார். உட­ன­டி­யாக இது­கு­றித்து காவல்­து­றை­யில் புகா­ரும் அளித்­துள்­ளார். இது­தொ­டர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என போலி­சார் தெரி­வித்­துள்ளபோதி­லும் நடந்­த­வற்றை அவ­ரால் ஜீர­ணிக்க முடி­ய­வில்­லை­யாம்.

இது குறித்து தனது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் பதி­விட்­டுள்ள அவர், சம்­பந்­தப்­பட்ட விஷ­மி­களை அரு­வெ­றுப்­பா­ன­வர்­கள் என காட்­டத்­து­டன் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இது­போன்ற முட்­டாள்­த­ன­மான செயல்­க­ளை­யெல்­லாம் செய்­வ­தற்கு நேரம் இருக்­கும் அரு­வருப்­பான நபர்­

க­ளி­டம் ஒன்று கேட்க விரும்­பு­கி­றேன். உங்­கள் வீட்­டில் தாய், சகோ­த­ரி­கள் இல்­லையா? உங்­க­ளு­டைய மூளையை இது­போன்ற முட்­டாள்­த­னங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தா­மல் ஆக்­கபூர்­வ­மான விஷ­யங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­துங்­கள். இதை உங்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்­தவே இந்­தப் பதிவு," என அனு­பமா குறிப்­பிட்­டுள்­ளார்.

தமி­ழில் தனு­சு­டன் 'கொடி' படத்­தில் நடித்­துள்ள அவர், தற்­போது கண்­ணன் இயக்­கத்­தில் அதர்வா நடிக்­கும் 'தள்­ளிப் போகாதே' படத்­தில் நாய­கி­யாக நடித்து வரு­கி­றார்.

படப்­பி­டிப்பு இருந்­தா­லும் இல்லை என்­றா­லும் எப்­போ­தும் பர­ப­ரப்­பாக இருப்­பார் சிம்பு. இந்­நி­லை­யில் அவர் சம்­பந்­தப்­பட்ட ஒரு புகைப்­ப­டம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

தற்­போது 'மாநாடு' படத்­தில் நடித்து வரு­ப­வர் படப்­பி­டிப்பு ரத்­தா­ன­தால் வீட்­டில் உள்­ளார். இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி தனக்கு நெருக்­க­மா­ன­வர்­கள் அனை­வ­ரு­ட­னும் தொலை­பேசி வழி தொடர்­பு­கொண்டு பேசி வரு­கி­றா­ராம்.

அந்த வகை­யில் மகத் உள்­ளிட்ட நண்­பர்­க­ளு­டன் அவர் பேசும் காணொ­ளிப் பதிவு ஒன்று சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யாகி உள்­ளது.

சிம்பு எந்த சமூக வலைத்­த­ளத்­தி­லும் உறுப்­பி­ன­ராக இல்லை. எனவே அவ­ரைப் பற்றி அண்­மைக் கால­மா­கப் புகைப்­ப­டங்­களோ காணொ­ளிப் பதி­வு­களோ அதி­கம் வெளி­யா­க­வில்லை. மற்ற நடி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் தீவி­ர­மாக இயங்­கும்­போது சிம்பு மட்­டும் ஒதுங்கி நிற்­பது அவ­ரது ரசி­கர்­க­ளுக்கு வருத்­தத்தை ஏற்­ப­டுத்தி இருந்­தது.

இந்­நி­லை­யில் சிம்பு தன் வீட்­டில் சமை­யல் செய்­யும் புகைப்­ப­டம் ஒன்று அவ­ரது நண்­பர் மூலம் வெளி­யாகி உள்­ளது. இது ரசி­கர்­கள் மட்­டு­மல்­லா­மல், திரை­யு­ல­கத்­தி­ன­ரை­யும் ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது. இதை அவ­ரது ரசி­கர்­கள் தற்­போது பர­வ­லா­கப் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே 'மாநாடு' படத்தை அடுத்து சுதா கொங்­க­ரா­வின் படத்­தில் நடிக்க சிம்பு ஒப்­பந்­த­மாகி இருப்­ப­தா­கத் தக­வல். இது­கு­றித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு விரை­வில் வெளி­யாக உள்­ள­தாம்.

அண்­மை­யில் அனைத்­து­லக உடன்­பி­றப்­பு­கள் தினம் அனு­ச­ரிக்­கப்­பட்­டது. எனி­னும் ஊர­டங்கு உத்­த­ர­வால் இந்­தாண்டு அத்­தி­னம் களை­கட்­ட­வில்லை.

இந்நிலையில் நடிகை ஷ்ருதிஹாசன் தனது தங்கை அக்‌ஷராவுடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அக்‌ஷரா அற்புதமான சகோதரி என்றும் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஷ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.