தவறு செய்யாதவர்கள் இருக்கமுடியாது - விஷ்ணு விஷால்

தவறு செய்யாதவர்கள் இருக்கமுடியாது - விஷ்ணு விஷால்

3 mins read
590e51f6-a176-43d4-9731-20f72f806643
விஷ்ணு விஷால் நடிப்­பில் அடுத்து வெளி­யா­கிறது 'காடன்'. மனி­தர்­கள் சுய­ந­லத்­துக்­காக காட்டு வளங்களை அழிப்­பது எவ்­வ­ளவு மோச­மான செயல் என்­பதை விவ­ரிக்­கும் படைப்­பாக இது உரு­வா­கி­ற­தாம். பிரபு சால­மன் இயக்­கி­யுள்­ளார்.  படம்:: ஊடகம் -

விஷ்ணு விஷால் நடிப்­பில் அடுத்து வெளி­யா­கிறது 'காடன்'. மனி­தர்­கள் சுய­ந­லத்­துக்­காக காட்டு வளங்களை அழிப்­பது எவ்­வ­ளவு மோச­மான செயல் என்­பதை விவ­ரிக்­கும் படைப்­பாக இது உரு­வா­கி­ற­தாம். பிரபு சால­மன் இயக்­கி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் அண்­மைய பேட்டி ஒன்­றில் தனது தனிப்­பட்ட வாழ்க்கை குறித்­தும் அடுத்த­கட்ட நகர்­வு­கள் குறித்­தும் விவ­ரித்­துள்­ளார் விஷ்ணு விஷால்.

கடந்த ஜன­வரி மாதம் சமூக வலைத்­த­ளத்­தில் வெளி­யிட்ட பதிவு ஒன்­றில் தான் மன உளைச்­ச­லுக்­கும் மன அழுத்­தத்­துக்­கும் ஆளா­ன­தைக் குறிப்­பிட்டு மதுப்­ப­ழக்­கத்­துக்கு அடி­மை­யாகி பட்ட சிர­மங்­க­ளை­யும் விவ­ரித்­தி­ருந்­தார். இந்­நி­லை­யில் பாட்­மிண்­டன் வீராங்­கனை ஜுவாலா கட்டா­வுக்­கும் இவ­ருக்­கு­மான காதல்­தான் விஷ்ணு விஷாலின் மண­வாழ்க்­கை­யில் விரி­சல் ஏற்­பட கார­ணம் என்று கூறப்­பட்டது. இது­குறித்து எந்­த­வித விளக்­க­மும் அளிக்­கா­மல் அமைதி காத்து வந்த விஷ்ணு தற்­போது வாய்­தி­றந்­தி­ருக்­கி­றார். இனி அவ­ரது பேட்­டி­யைக் காண்­போம்:

"காதல் வயப்­பட்டு உற்­சா­கத்­து­டன் திரிய நான் ஒன்­றும் 18 வயது இளை­ஞன் அல்ல. காதல் ஒரு­மு­றை­தான் வரும். என்­னைப் பொருத்த­வரை காதல் என்­பது திரு­ம­ணம் மற்­றும் அதற்­குப் பிற­கான வாழ்க்கை. என் வாழ்க்­கை­யில் அது முடிந்து­விட்­டது. 11 ஆண்­டு­கள் வாழ்ந்த ஒரு வாழ்க்­கையை அவ்­வ­ளவு சுல­பத்­தில் மறந்து­விட முடி­யாது.

"நான் ஜுவாலா கட்­டா­வுடன் நெருக்­க­மாக இருந்­தேன் என்­றும் பிறகு நடிகை அம­லா­ பாலு­டன் நெருங்­கிப் பழ­கி­னேன் என்­றும் ஆளா­ளுக்கு செய்தி வெளி­யி­டு­கி­றார்­கள். அவை­யெல்­லாம் உண்­மை­யல்ல. அதற்­காக இவை­யெல்­லாம் வதந்­தி­கள் என்று நிரூ­பிக்க எனது விவா­க­ரத்­துக்­கான கார­ணம் என்ன என்­பதை வெளிப்­ப­டுத்த இய­லாது. அது என் தனிப்­பட்ட விஷ­யம். அது­கு­றித்­து பேச­ வி­ரும்­ப­வில்லை.

"ஜுவாலா கட்­டா­வும் நானும் நல்ல நண்பர்­க­ளாக இருக்­கி­றோம். வாழ்க்­கை­யில் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் அனு­ச­ர­ணை­யாக இருப்­பதை நான் வர­வேற்­கி­றேன். நாட்­க­ளின் போக்­கில் உங்­க­ளு­டைய மகிழ்ச்­சியை, துக்­கத்­தைப் பகிர்ந்­து­கொள்ள யாரேனும் ஒரு­வர் தேவை. விவா­க­ரத்­துக்­குப் பிறகு ஜுவா­லா­வைச் சந்­தித்­தேன். அவ­ரு­டன் அதிக பொழுதைச் செல­விட்­டேன்.

"அவர் நேர்­ம­றை­யான எண்­ணம் கொண்டவர். அது எனக்­குப் பிடித்­தி­ருக்­கிறது. என்­னைப் போலவே அவ­ரும் தன் வாழ்க்­கை­யில் பிரி­வைச் சந்­தித்­த­வர். இரு­வ­ரும் கலந்து பேசி­னோம். ஒரு­வரை ஒரு­வர் புரிந்துகொண்­டோம். இப்­போது எல்­லாம் நல்லவித­மா­கச் சென்றுகொண்­டி­ருக்­கிறது.

"எனக்கு இப்­போது 35 வய­தா­கிறது. வாழ்க்­கை­யின் யதார்த்­தத்தை உணர்ந்து நன்கு முதிர்ச்சி அடைந்­துள்­ளேன். எதிர்­கா­லத்­தில் என்ன நடக்­கும் என்­பதை பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்­க­ வேண்­டும்.

"வாழ்க்­கை­யில் தவறு செய்­யா­த­வர்­கள் இருக்க முடி­யாது. நானும் அதற்கு விதி­வி­லக்­கல்ல. மண­வாழ்க்­கை­யி­ல் இ­ருந்து பிரிந்து நிற்­பது என்னை நிச்­ச­ய­மா­கப் பாதித்­துள்­ளது. என் மன­தில் இருப்­பதை வார்த்­தை­க­ளால் விவ­ரித்­து­விட முடி­யாது.

"தனிப்­பட்ட வாழ்க்கை, தொழில், நட்பு என்று அனைத்­தும் பாதிக்­கப்­ப­டும்­போது நிச்­ச­ய­மாக மன அழுத்­தம் ஏற்­படும். இது சாதா­ர­ண­மாக கடந்­து­போ­கும் விஷ­ய­மல்ல. 28 வயது வரை மது­வைத் தொட்­டுக்­கூ­டப் பார்க்­கா­த­வன் திடீ­ரென மதுப்­ப­ழக்­கத்­திற்கு ஆளா­னேன். அதன்பிறகு கிட்டத்தட்ட மதுவுக்கு அடிமையாகும் அளவுக்குச் சென்றேன். பெற்றோரை நல்லவிதமாகக் கவனித்துக் கொள்வதில் தோற்றுவிட்டதாகத் தோன்றியது.

"அந்தக் குற்ற உணர்வில் இருந்து விடுபட மீண்டும் நம்பிக்கையுடன் உழைக்கத் தொடங்கினேன். கடுமையாக உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய உடற்கட்டைப் பெற்றேன். இது மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. இப்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். 'காடன்' நிச்சயம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது," என்கிறார் விஷ்ணு விஷால்.