ராஷி கன்னா: தன்னம்பிக்கையே தேவை

ராஷி கன்னா: தன்னம்பிக்கையே தேவை

3 mins read
d66f7daf-ee79-4079-bf89-36e24c685efa
கிரு­மித் தொற்று குறித்து வெளி­யா­கும் தக­வல்­கள் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­னா­லும் மக்­கள் தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­பட வேண்­டு­மென நடிகை ராஷி கன்னா தெரி­வித்­துள்­ளார்.  படம்: ஊடகம் -

கொரோனா கிரு­மித் தொற்று குறித்து வெளி­யா­கும் தக­வல்­கள் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­னா­லும் மக்­கள் தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­பட வேண்­டு­மென நடிகை ராஷி கன்னா தெரி­வித்­துள்­ளார்.

தேவை­யற்ற தக­வல்­களை தலை­யில் ஏற்­றிக்­கொண்டு வீண் மன அழுத்­தத்­துக்கு ஆளாக வேண்­டாம் என்­றும் அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

கொரோனா கிரு­மித் தொற்று பர­வ­லைத் தடுப்­ப­தற்கு ஏது­வாக நாடு முழு­வ­தும் ஊர­டங்கு உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. விடுப்பு எடுக்­க­மு­டி­யா­மல் தவித்­த­வர்­க­ளும்­கூட வீட்­டி­லேயே முடங்­கிக் கிடப்­ப­தில் விருப்­ப­மில்லை என்­கி­றார்­கள். இத­னால் பல­ருக்கு மன அழுத்­தம் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் வீட்­டி­லேயே இருப்­ப­தால் ஏற்­ப­டக்­கூ­டிய மன அழுத்­தத்­தி­லி­ருந்து விடு­பட என்ன செய்­ய­வேண்­டும் என ராஷி கன்னா விவ­ரித்­துள்­ளார்.

"இப்­போ­தைய சூழ்­நி­லை­யில் நாட்டு நடப்பு குறித்த தக­வல்­களை, குறிப்­பாக கிரு­மித் தொற்று குறித்த விவ­ரங்­க­ளைத் தெரிந்­து­கொள்­வது முக்­கி­யம்­தான். எனி­னும் இது தொடர்­பாக அள­வுக்­கு­மீறி பல்­வேறு தக­வல்­கள் பர­வு­கின்­றன.

"குறிப்­பாக இத்­தனை பேர் இறந்­து­விட்­ட­னர். நாடே பிரச்­னை­யில் சிக்­கிக் கொண்­டுள்­ளது. உல­கமே அழிந்­து­வி­டப் போகிறது என்­கிற ரீதி­யில் பர­வும் தக­வல்­களை நம்­ப­வேண்­டாம். இந்த விஷ­யங்­களை நம் தலைக்­குள் ஏற்­றிக் கொண்­டால் வீண் மன அழுத்­தத்­துக்கு ஆளாக நேரி­டும்," என்று ராஷி கூறி­யுள்­ளார்.

மக்­கள் தற்­போது தங்­கள் எண்­ணங்­க­ளை­யும் கவ­னத்­தை­யும் நல்ல விஷ­யங்­க­ளின் பால் திருப்ப வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அப்­போ­து­தான் நிம்­ம­தி­யா­க­வும் உற்­சா­க­மா­கவும் இருக்க முடி­யும் என அறி­வு­றுத்தி உள்­ளார்.

"நல்ல புத்­த­கங்­களைப் படி­யுங்­கள். தவ­றா­மல் யோகா, தியா­னம் செய்­யுங்­கள். இத­னால் மன­துக்கு அமைதி, ஆனந்­தம் கிடைக்­கும். பயத்­தில் இருந்து வெளியே வர­வேண்­டும் என்­றால் கண்­டிப்­பாக இதைச் செய்­ய­வேண்­டும்.

"இந்த நேரத்­தில் அழகு மற்­றும் ஆரோக்­கி­ய­மாக இருக்க என்­ன­வெல்­லாம் செய்ய வேண்­டும் என்று நினைத்­தும், நேரம் கிடைக்­கா­மல் ஒதுக்கி வைத்­தோமோ அதை­யெல்­லாம் செய்­யுங்­கள். வீட்­டில் அதைத்­தான் நான் செய்­கி­றேன். இப்­போது தன்­னம்­பிக்­கை­தான் தேவை," என்று ராஷி கன்னா மேலும் தெரி­வித்­துள்­ளார்.

பிர­பல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் தமது சமூ­க­வ­லைத்­த­ளப் பக்­கத்­தில், மனி­தர்­கள் இந்­தப் பூமி­யின் விருந்­தி­னர்­களே தவிர எஜ­மா­னர்­கள் அல்ல என்று குறிப்­பிட்­டுள்­ளார். ஊர­டங்கு தனி­மை­யில் இருக்­கச் செய்­துள்ள நேரத்­தில், அனை­வ­ரும் மன அழுத்­தம், பதற்­றம் என தனி­மை­யின் பாதிப்பை உணர நேர்ந்­துள்­ள­தா­க அவர் தெரி­வித்­துள்­ளார்.

மிரு­கங்­களும் அதே­போன்ற உணர்ச்­சி­களை இப்­போது உண­ரும் என அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"மனி­தர்­க­ளாக, நாம் ஒரு சூழலை அனு­ப­விக்­கும் வரை அதே சூழ­லில் இருக்­கும் மற்­ற­வர்­க­ளின் நிலை­யைப் புரிந்­து­கொள்ள மறுக்­கி­றோம். ஆனால் நாம் இப்­போது சிறைப்­ப­டுத்­தப்­ப­டு­வது எப்­படி இருக்­கும் என்­பதை உணர்ந்­து­விட்­டோம். அந்த பச்­சா­தா­பத்தை, இந்­தப் பூமியை நாம் பங்கு போட்­டுக் கொண்­டி­ருக்­கும் மற்ற உயிர்­க­ளி­டத்­தி­லும் காட்­டு­வோம்.

"லட்­சக்­க­ணக்­கான மிரு­கங்­கள் அதன் வாழ்க்கை முழு­வ­தும் தனி­மை­யில் இருக்­கின்­றன. தனி­மை­யில் இந்த மிரு­கங்­கள் தங்­க­ளைக் காயப்­ப­டுத்­திக் கொள்­ளு­தல் போன்ற கவ­லைக்­கு­ரிய விஷ­யங்­க­ளைச் செய்து கொள்­கின்­றன. மன­ந­லம் என்­பது மனி­தர்­க­ளுக்­கா­னது மட்­டு­மல்ல. எனவே, தனிமை உங்­க­ளுக்­குச் சோர்­வைத் தரு­கிறது எனில் விலங்­கு­க­ளுக்­கும் அப்­ப­டித்­தான் இருக்­கும். இதைப் புரிந்து கொள்­வோம்," என்று ஷ்ரத்தா கபூர் கூறி­யுள்­ளார்.

எந்த உயி­ரி­ன­மும் சிறை­பட்டு வாழக்­கூ­டாது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், மனி­தர்­கள் தங்­களை இந்­தப் பூமி­யின் எஜ­மா­னர்­க­ளாக கரு­தக்­கூ­டாது எனத் தெரி­வித்­துள்­ளார்.

அவ­ரது இந்­தப் பதி­வுக்கு ஆத­ர­வா­கப் பலர் பின்­னூட்­ட­மிட்­டுள்­ள­னர்.