ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதைக் காட்டிலும் மத்திய அரசு நாட்டிலுள்ள ஏழைகளைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
மே 3ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை நீக்கிய பிறகு கொரோனா கிருமி காட்டுப்பகுதிக்குள் சென்றுவிடும் என மத்திய அரசு நம்புகிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
"ஏழைகளுக்குக் குறைந்த அளவேனும் பண உதவி செய்யுங்கள். ஒருவேளை மே 3ஆம் தேதிக்குப் பிறகு ஒருவருக்கு கிருமி தொற்றினால் அவர் மூலமாக மீண்டும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பரவிவிடும். அதன்பிறகு என்ன செய்வது? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்," என்று ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

