ஊரடங்கு உத்தரவால் அழகு நிலையங்களுக்குச் செல்ல முடியாத காரணத்தால் தனது முகத்தோற்றம் சற்றே மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வழக்கமாக அவ்வப்போது அழகு நிலையம் சென்று முக அழகைப் பராமரித்து வருவாராம்.
தற்போது அழகு நிலையம் செல்ல முடியாத நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்களாலும் தன் வீட்டுக்கு வரமுடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இதனால் என் புருவ முடிகள் வேகமாக வளர்ந்து அதன் அமைப்பு தடித்துவிட்டது. இதனால் எனது முகத்தோற்றம் மாறியுள்ளது. இது கவலை அளிக்கிறது.
"இந்த மாற்றம் காரணமாக நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் தோற்றமும் மாறக்கூடும்.
இந்தக் காரணத்துக்காக தயாரிப்பாளர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்," என்று ஷ்ரத்தா தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

