மகளின் நினைவு நாள்: நெகிழ வைத்த பதிவு

1 mins read
e5bcae62-284a-4c53-bab5-4d08ebf08774
தனது மக­ளின் நினை­வு­தி­னத்தை முன்­னிட்டு சமூக வலைத்­த­ளத்­தில் பின்­ன­ணிப் பாடகி சித்ரா பதி­விட்­டி­ருப்­பது அனை­வ­ரை­யும் நெகிழ வைத்­தி­ருக்­கிறது. படம்: ஊடகம் -

தனது மக­ளின் நினை­வு­தி­னத்தை முன்­னிட்டு சமூக வலைத்­த­ளத்­தில் பின்­ன­ணிப் பாடகி சித்ரா பதி­விட்­டி­ருப்­பது அனை­வ­ரை­யும் நெகிழ வைத்­தி­ருக்­கிறது.

மகளை இழந்த காயம் இன்­னும் அதே வலி­யு­டன் தன் மன­தில் நீடிப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஆட்­டி­சம் (கற்­றல் குறை­பாடு) பாதித்த தனது மகள் நந்­த­னா­வு­டன் கடந்த 2011ஆம் ஆண்டு துபாய் சென்­றி­ருந்­தார் சித்ரா. துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக நந்­தனா அங்கு உயி­ரி­ழந்­தார்.

இந்­நி­லை­யில் மகளை இழந்த துக்­கத்­து­டன் சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்­டுள்­ளார் சித்ரா.

"ஒவ்­வொரு பிறப்­புக்­கும் ஒரு கார­ணம் உண்டு என்­றும் அதன்­பின்­னர் மறு உல­கத்­திற்­குச் செல்­வோம் என்­றும் பலர் சொல்­லக் கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றேன். காலம் சிறந்த மருந்து என்­றும் சொல்­வார்­கள்.

"ஆனால், கஷ்­டத்­தில் இருக்­கும் மக்­க­ளுக்­குத்­தான் தெரி­யும்... இவை­யெல்­லாம் உண்­மை­யல்ல என்று... காயம் இன்­னும் அப்­ப­டியே வலி­யு­டன் இருக்­கிறது," என்று சித்ரா தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அவருக்கு ஆறுதல் தெரிவித்து ஏராளமானோர் பின்னூட்டமிட்டு வருகிறார்கள்.