பிரகாஷ்ராஜ்: கடன் வாங்கியாவது மக்களுக்கு உதவுவேன்

பிரகாஷ்ராஜ்: கடன் வாங்கியாவது மக்களுக்கு உதவுவேன்

1 mins read
a21890d9-037c-4a26-b309-b9a5fc2982de
என்னிடம் நிதி குறைவாக உள்ளது. எனினும் நான் கடன் வாங்கியாவது தொடர்ந்து சமூகப் பணிகளைச் செய்வேன் என்கிறார் பிரகா‌ஷ் ராஜ். படம்: ஊடகம் -

தம்மிடம் பணம் குறைவாகத்தான் உள்ளது என்றாலும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்யப் போவதாகச் சொல்கிறார் பிரகாஷ்ராஜ்.

இந்தக் கடினமான தருணத்தில் இருந்து மீள அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

"என்னிடம் நிதி குறைவாக உள்ளது. எனினும் நான் கடன் வாங்கியாவது தொடர்ந்து சமூகப் பணிகளைச் செய்வேன். ஏனென்றால் என்னால் மீண்டும் சம்பாதிக்க முடியும்.

"எனவே கையிருப்பு உள்ள வரை உதவுவேன். அதன் பிறகு கடன் வாங்கி ஏழைகளுக்காகச் செலவிடுவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை," என்கிறார் பிரகாஷ்ராஜ்.

தமது அறக்­கட்­டளை மூலம் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு இவர் உதவி செய்து வரு­கி­றார். அவர்­க­ளுக்கு தேவை­யான அரிசி, பருப்பு உள்­ளிட்ட மளிகை பொருட்­களை வழங்கி வரு­கி­றார்.

அவ­ரைப் பல­ரும் பாராட்டி உள்­ள­னர்.