கொவிட்-19: ரூ. 1.30 கோடி நிதி அறிவித்த விஜய்

கொரோனா கிருமித் தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக திரையுலகத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு நிதியளித்து வருகின்றனர்.

மேலும் திரையுலகம் சார்ந்த சங்கங்களுக்கும் சிலர் நிதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் தன் பங்குக்கு 1.3 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம், தமிழ்த் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு 25 லட்சம் வழங்கியுள்ளார் விஜய்.

மேலும் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுவை மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.

இதுபோக தனது ரசிகர் மன்றம் மூலமாகவும் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நேரடியாக நிவாரண நிதி வழங்கவும் விஜய் குறிப்பிட்ட ஒரு தொகையை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!