தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஹ்மான் பின்பற்றும் ஆறு விஷயங்கள்

1 mins read
2ba35ded-3239-4405-b2cb-73ea978b1d7e
வீட்­டி­லேயே இருந்­தா­லும்கூட வீட்­டுக்­கும் வேலை செய்­யும் பகு­திக்­கும் வித்­தி­யா­சம் இருப்­பது முக்­கி­யம் என்கிறார் ரஹ்மான். படம்: ஊடகம் -

ஊர­டங்கு கார­ண­மாக வீட்­டி­ல் இருந்­த­ப­டியே இசைப்­பணி­க­ளைக் கவ­னித்து வரு­கி­றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தாம் பின்­பற்­றும் ஆறு முக்­கி­ய­மான விஷ­யங்­களை அண்­மைய பேட்டி ஒன்­றில் அவர் பட்­டி­ய­லிட்­டுள்­ளார்.

"மன­நல ஆரோக்­கி­யத்­தைப் பேணு­வது முக்­கி­யம். நன்­றாகத் தூங்­குங்­கள், சாப்­பி­டுங்­கள். அதிகம் சாப்­பி­டா­தீர்­கள். உங்­கள் மன­து­தான் முக்­கி­ய­மான விஷ­யம். அதைத் தூய்­மை­யாக வைத்­திருங்கள்.

"தூய்­மை­யாக, சுகா­தா­ர­மாக இருங்­கள். வீட்­டி­லி­ருந்து வேலை செய்­தா­லும், அதற்­கான உடையை உடுத்­துங்­கள். "எனது அலுவலகத்தில் இர­வில் நான் வேலை செய்­யும்­போது கூட நான் வீட்­டில் அணி­யும் உடைகளை அணி­ய ­மாட்­டேன்.

"வீட்­டி­லேயே இருந்­தா­லும்கூட வீட்­டுக்­கும் வேலை செய்­யும் பகு­திக்­கும் வித்­தி­யா­சம் இருப்­பது முக்­கி­யம்.

"மேற்சொன்ன விஷயத்தைப் பின்பற்றி வேலை முடிந்ததும் மற்றவர்களிடம் பேசுங்கள். அப்போதுதான் வேலை நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

"நான் வேலை செய்யும் இடத்தில் ஊதுவத்தியோ, மெழுகுவர்த்தியோ ஏற்றி வைப்பேன். உள்ளே வருபவர்கள் நல்ல அதிர்வுகளை உணர்வார்கள். அவர்களுக்கு அது மிகவும் பிடிக்கும்.

"நான் பல தொழில்நுட்பங்களை, கருவிகளைப் பயன்படுத்துகிறேன். ஆனால் இறுதியில் எனது அறிவு என்பது ஒரு கூட்டு உணர்விலிருந்து, எல்லையற்ற ஒரு சக்தியிலிருந்து கிடைக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

"நாம் அனைவரும் பல்வேறு விஷயங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதற்கு வித்தியாசமான பெயர்களைத் தருகிறோம். ஆனால் அதெல்லாம் குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து தான் வருகிறது," என்கிறார் ரஹ்மான்.