'நம் பூமியை நேசிப்போம்'

3 mins read
3084ba1a-df10-4c6d-9e36-623a349ce63c
-

கடந்த 22ஆம் தேதி உலக பூமி தினம் சத்­த­மின்­றிக் கடந்து போயுள்­ளது. கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பீதி­யில் உலக மக்கள் இத்­த­கைய பல விஷயங்­க­ளைக் கடந்து போய்­விட்­ட­னர்.

எனி­னும் சில நடி­கை­கள் பூமி குறித்த அக்­க­றை­யில் நல்ல பதி­வு­களை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்­டுள்­ள­னர்.

இயற்கை கொரோனா கிருமி மூலமாக மனித குலத்­துக்­கு தற்­போது எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது என்­கி­றார் நடிகை ரகுல் பிரீத்­சிங்.

இந்த எச்­ச­ரிக்­கையை உலக மக்­கள் உதா­சினப்­ப­டுத்தக்­ கூடாது என்­றும் அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

"இந்­தப் பூமி மிக­வும் வியக்­கத்­தக்க புத்­தி­சா­லித்­த­னம் கொண்­டது.

"பூமி­யி­டம் நாம் சர­ண­டைந்து விட்­டால் நம் வேர்­க­ளைப் பதித்து, கிளை பரப்பி, பரந்து விரிந்து மரங்­க­ளைப்­போல் வாழ­ மு­டி­யும்.

"அதற்­கான நேரம் இப்­போது கிடைத்­தி­ருக்­கிறது. இதைப் பயன்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டும்," என்று ரகுல் பிரீத்­சிங் தெரி­வித்­துள்­ளார்.

நம்­மைக் காப்­பாற்­றும் பூமிக்கு பொறுப்­புள்­ள­வர்­க­ளாக நாம் நடந்து கொள்­வ­தில்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், இயற்­கைக்­குள், அதன் அழ­கிற்­குள் தொலைந்­து­போய் நம்மை நாமே கண்­டு­பி­டிக்க வேண்­டிய தரு­ண­மிது என்­கி­றார்.

பூமி­யைச் சுத்­த­மா­க­வும் பசு­மை­யா­க­வும் வைத்­துக் கொள்­வது மிக அவ­சி­யம் என்­கி­றார் தமன்னா.

அதைச் செய்­யா­மல் போன­தால் ஏற்­பட்­டி­ருக்­கும் மாற்­றங்­க­ளைத்­தான் மனித குலம் தற்­போது அனு­ப­வித்து வரு­வ­தாக சமூக வலைத்­த­ளப் பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

"பூமி­யைக் காப்­பாற்ற அனை­வ­ரும் உறுதி ஏற்க வேண்­டும். அண்­மைய சில வாரங்­க­ளாக நாம் சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கும் பிரச்­சி­னை­கள், இழப்­பு­கள் அனைத்­தை­யும் வாழ்­நா­ளின் இறுதி வரை மறக்­கவே கூடாது," என­வும் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

மரங்­கள் மீது தீராத, காதல் கொண்­ட­வர் நடிகை மாள­விகா மோக­னன். 'மாஸ்­டர்' படப்­பி­டிப்பு முடிந்த கையோடு ஆப்­பி­ரிக்க நாடு­களில் ஒன்­றான தான்சானியா­வுக்­கு சென்­றா­ராம்.

அங்­குள்ள தேசிய உயி­ரி­யல் பூங்­கா­வில் சில தினங்­க­ளைக் கழித்­த­து­டன் விலங்­கு­க­ளைப் படம் பிடித்­தும் இயற்கை வளங்­களை ரசித்­துப் பார்த்­தும் பொழு­தைக் கழித்­தா­ராம்.

"எனது தந்தை சினிமா ஒளிப்­ப­தி­வா­ளர் என்­பது எல்­லோ­ருக்­கும் தெரி­யும். இத­னால் எனக்­கும் சிறு வயது முதலே புகைப்­ப­டம் எடுப்­ப­தில் மிகுந்த ஆர்­வம் உண்டு. மரங்­க­ளை­யும் அதி­க­மாக நேசிக்­கி­றேன்.

"என­வே­தான் உலக பூமி தினத்­தை­யொட்டி மரங்­க­ளின் மீதான என் காதலை வெளிப்­ப­டுத்­தும் வகை­யில் பெரிய மரம் ஒன்­றைக் கட்­டிப்­பி­டித்­தி­ருக்­கும் புகைப்­ப­டத்தை வெளி­யிட்­டுள்­ளேன்," என்­கி­றார் மாள­விகா.

அந்­தப் புகைப்­ப­டத்­தின் கீழ் 'எங்­கெல்­லாம் மரங்­கள் உள்ளனவோ அங்­கெல்­லாம் நான் இருப்­பேன். மரங்­க­ளைக் கட்­டி­ய­ணைத்­த­படி நான் நிற்­பதை நீங்­கள் பார்க்­க­லாம்' என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார் மாள­விகா மோக­னன்.

இதே­போல் நடிகை இலி­யா­னா­வும் பெரிய மரம் ஒன்­றின் நிழ­லில் ஊஞ்­சல் கட்டி படுத்­தி­ருக்­கும் புகைப்­ப­டத்தை வெளி­யிட்­டுள்­ளார்.

"பூமித்­தா­யின் செல்­லப் பிள்­ளை­யான பெரிய மரம் ஒன்­றின் கீழ் இவ்­வாறு இளைப்­பா­று­வது பெரும் நிம்­ம­தியை அளிக்­கிறது. நிம்­மதி தரும் பூமிக்கு நன்றி," என்று கூறி­யுள்­ளார் இலி­யானா.

"நாம் இப்­போது ஒதுங்­கி­யி­ருக்­க­லாம். ஆனால் பூமி நம்மை ஒன்று சேர்க்­கிறது. இந்த உல­கம் நம் வீடு. தாய் பூமியை நாம் எல்­லா­ரும் சேர்ந்து ஒன்­றாக குணப்­ப­டுத்­து­வோம்," என்று கூறி­யுள்­ளார் நடிகை பிரி­யங்கா சோப்ரா.

"ஆங்­கி­லத்­தில் 'இத­யம்' (HEART) என்­ப­தற்­கும் 'பூமி' (EARTH ) என்­ப­தற்­கும் எழுத்­துக்­கள் ஒரே மாதி­ரி­யா­க­தான் உள்­ளன. இதுவே நமக்கு பூமியை காப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்­தும்," என்­கி­றார் 'லிங்கா' புகழ் சோனாக்‌ஷி சின்ஹா.

இந்­தக் கருத்­து­டன் தாமும் ஒத்­துப்­போ­வ­தா­கச் சொல்­கி­றார் மற்றோர் இந்­தித் திரை­யு­ல­கப் பிர­ப­ல­மான இஷா குப்தா.

"நம்­மைப் பற்றி மட்­டுமே சிந்­திப்­பது தன்னலம். அடுத்த தலை­மு­றை­யி­னர் குறித்­தும் நாம் அக்­கறை கொள்ள வேண்­டும். இந்­தப் பூமியை எந்­த­வித குறை­பாடு­களும் இல்­லா­மல் விட்­டுச் செல்­வது நமது பொறுப்பு என்­பதை உணர வேண்­டும். பூமி­யின் இயற்­கைத் தன்மை மாறி­வி­டக் கூடாது என்­ப­தில் கவ­னம் தேவை," என்­கி­றார் நிக்கி கல்­ராணி.