நடிகை பிரனிதா தினமும் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நல்ல காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறார்.
'சகுனி', 'மாஸ்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர், ஆந்திராவில் தாம் வசிக்கும் பகுதியில் உள்ள வெளிமாநில தொழிலாளர்
களுக்கும் ஏழை மக்களுக்கும் உணவு வழங்குகிறார்.
ஏதேனும் தொண்டு நிறுவனத்திடம் இதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு கடமை முடிந்தது என்று எண்ணாமல் தானே நேரடியாக களமிறங்கி உள்ளார் பிரனிதா.
இவரது நேரடி மேற்பார்வையில் ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு சமைக்கப்படுகிறது.
பின்னர் அந்த உணவு, பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
முடிந்தவரை தன் கையால் பலருக்கு உணவு வழங்கி திருப்தி அடைகிறார் பிரனிதா. இவருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

