‘மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னிச் சிறகுகள்’.
இது அதிரடி சண்டைக் காட்சிகளும் திடீர் திருப்பங்களும் கொண்ட திகில் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
அக்ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கே.ஏ.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். டி.சிவா அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
கோல்கத்தாவில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். அடுத்து கஜகஸ்தானில் பல முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனர்.
கதைப்படி சீனு எனும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனியும் ரஞ்சித் என்ற வேடத்தில் அருண் விஜய்யும் நடித்துள்ளனர்.
அக்ஷரா ஹாசனுக்கு மிக கனமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாம்.
ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு இறுதிக்கட்ட படப்பிடிப்பை துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.
அநேகமாக இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியீடு காணும் என கோடம்பாக்க விவரப் புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.