'யுவன் நல்ல மனிதர்; அதனால் மணந்தேன்'

'யுவன் நல்ல மனிதர்; அதனால் மணந்தேன்'

2 mins read
f8337f6e-abab-47e6-85e9-5e52ee10a4f5
மனைவி நிஷாவுடன் யுவன் சங்கர் ராஜா. படம்: ஊடகம் -

இசை­ய­மைப்­பா­ளர் யுவன் சங்­கர் ராஜா கடந்த 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்­தை தழு­வி­ய­து­டன் தனது பெய­ரை­யும் அப்­துல் காலிக் என்று மாற்­றிக்­கொண்­டார்.

இதை­ய­டுத்து அடுத்த ஆண்டே ஷாஃப்ரூன் நிஷா­வு­டன் அவ­ருக்­கு திரு­ம­ண­மா­னது. யுவன் மனைவி நிஷா ஆடை வடி­வ­மைப்­பா­ளர். அவ­ரது நெருக்­க­மான தோழி­களில் ஒரு­வ­ரான ரம்­ஜான் பீவி என்­ப­வர் மூல­மா­கத்­தான் யுவ­னின் நட்பு கிடைத்­த­தாம்.

அண்­மை­யில் இன்ஸ்­ட­கி­ராம் மூலம் ரசி­கர்­க­ளு­டன் யுவ­னின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா உரை­யா­டி­னார். அப்­போது யுவ­னின் மத­மாற்­றம் உட்­பட பல்­வேறு விஷ­யங்­கள் தொடர்­பாக எழுப்­பப்­பட்ட கேள்வி­க­ளுக்கு அவர் தெளி­வாக பதி­ல­ளித்து இருந்­தார். மேலும் பல்வேறு கேள்­வி­க­ளுக்கு யுவன் அளித்த பதில்­க­ளைக் காணொ­ளிப் பதி­வா­க­வும் நிஷா வெளி­யிட்­டார்.

"என் தோழி ரம்­ஜான் பீவி­யி­டம் தனக்­கேற்ற ஒரு பெண்­ணைப் பார்க்­கச் சொல்லி இருக்­கி­றார் யுவன். பீவி மூலம் நான் துபாய், மலே­சியா என சில நாடு­களில் உள்ள வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­காக ஆடை வடி­வ­மைப்பு செய்­தி­ருக்­கி­றேன்.

"பீவி­தான் என்­னை­யும் யுவ­னை­யும் இணைத்­தார். திரு­மண யோச­னை­யை­யும் முன்­வைத்­தார். என்­னைத் திரு­ம­ணம் செய்­வ­தற்­கா­கவே யுவன் மதம் மாறி­ய­தாக சிலர் கூறுவது சரி­யல்ல.

"நம் நாட்­டில் திரு­ம­ணத்­துக்­கா­க­வும், பொருள்­சார் கார­ணங்­க­ளுக்­கா­க­வுமே எல்­லோ­ரும் மதம் மாறு­வ­தாக சிலர் நினைத்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். எல்­லா­வற்­றை­யும்விட நம்­பிக்­கை­தான் முக்கியம் என்­பது அவர்­க­ளுக்­குப் புரி­ய­வில்லை.

"நம்­பிக்­கை­யைத் திணிக்­க­ முடியாது. அப்­ப­டித் திணிக்­கப்­பட்டால் அது நம்­பிக்­கையே கிடை­யாது. மாறாக, கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்ட அடக்­கு­மு­றை­யா­கி­வி­டும்," என்று ஷாஃப்ரூன் நிஷா தெரி­வித்­துள்­ளார்.

தனக்கும் யுவனுக்குமான திருமணம் அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது என்றும் திருமணம் தொடர்பாக சில அனுமானங்கள், குழப்பங்கள் தலைதூக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிஷாவின் தாயார், பெரியப்பா, பெரியம்மா ஆகிய மூவரையும் யுவன் சந்திக்க தோழி பீவி ஏற்பாடு செய்தாராம். அந்தச் சந்திப்பின்போது மூவருக்கும் ஒரு நல்ல மனிதர் என்ற வகையில் யுவனைப் பிடித்திருந்ததாம். அதனால்தான் திருமணம் நிச்சயமானது என்று நிஷா குறிப்பிட்டுள்ளார்.