திரைத்துறை நண்பர்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார் நடிகர் சூரி.
இந்த நல்ல காரியத்தில் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமமும் மாற்றம் பவுண்டேஷனும் இணைந்து கொண்டன.
இந்நிகழ்வில் பேசிய சூரி, கடந்த மூன்று மாதங்களில் உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனா கிருமிதான் என்றார்.
"பயப்படாமல் இருங்கள், அதே நேரத்தில் மெத்தனமாக இருக்காதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள்.
மீண்டும் நாம் அனைவரும் இயல்புநிலைக்கு வர அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்," என்றார் சூரி.

