கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சுமார் 70 நாட்கள் கழித்து சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் குஷ்பு, சங்க உறுப்பினர்களுக்கு பத்திரி கையாளர்களைப் பற்றி மரியாதை இல்லாமல் பேசிய ஆடியோ ஒன்று வெளியானதால் பத்திரிகையாளர்கள் பலர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த ஆடியோவில், “படப்பிடிப்பில் முகக் கவசம், கை சுத்திகரிப்பான் ஆகியவை வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் படப்பிடிப்பு தளத்திற்குள் பத்திரிகையாளன் வந்து படம்பிடித்துப் போய்விடுவான். கொரோனா தவிர அவன்களுக்கு எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. அதனால் அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள் என்று பத்திரிகையாளர்களை அவன், இவன்,” என்று பேசியிருந்தார்.
அந்த ஆடியோ வெளியானதால் அதிர்ச்சி அடைந்த குஷ்பு, “என் 34 ஆண்டு திரை வாழ்வில் ஒருபோதும் பத்திரிகையாளர்களை அவமரியாதை செய்தது கிடையாது. மேலும் இந்த ஆடியோ திருத்தப்பட்டுள்ளது. யாரையும் நான் காயப்படுத்தி இருந்தால்
மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.